ஓட்டமாவடியில் உணவகங்கள் மீது 3 நாள் தொடர் பரிசோதனை : பேக்கரி, உணவகத்துக்கு பூட்டு

உணவகங்களின் தரத்தைப்பேணும் வகையிலும் வாடிக்கையாளர்களுக்கு சுத்தமான உணவு கிடைக்க வேண்டுமெனும் நோக்கிலும் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் தொடர்ச்சியாக 3 நாட்கள் ஓட்டமாவடி பிரதேசத்திலுள்ள உணவகங்கள், பேக்கரிகள் மற்றும் இறைச்சிக்கடைகள் மீது பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி Dr... Read more »

யாழ் மாநகரசபையின் வரவு செலவுத்திட்டம் தோற்க்கடிப்பு!

யாழ். மாநகர சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏழு மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. யாழ். மாநகர சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று (21.12.2022) மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக... Read more »
Ad Widget

யாழில் குடும்பஸ்தர் ஒருவர் மாயம்!

யாழ்.பலாலி – அன்ரனிபுரம் கிராமத்திலிருந்து கடற்றொழிலுக்கு சென்றிருந்த 54 வயதான 4 பிள்ளைகளின் தந்தை காணாமல் போயுள்ளதாக கூறப்படுகின்றது. கடந்த ஞாயிற்றுகிழமை (18) பலாலியிலிருந்து தனியாக கடற்றொழிலுக்கு சென்ற இராயப்பு ரொபேட் கெனடி என்பவரே இவ்வாறு காணமல்போனாதாக தெரிவிக்கப்படுகிறது. காணமல்போன கடற்றொழிலாளர் தொழிலுக்குச் சென்ற... Read more »

யாழ் சாவகச்சேரியில் விபரீத முடிவால் உயிரை மாய்த்துக் கொண்ட பாடசாலை மாணவி!

யாழ் சாவகச்சேரியில் பாடசாலை மாணவி டிலக்சிகா எனும் மாணவி விபரீத முடிவால் உய்ரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் எதிர்பார்த்த அளவு பெறுபேறு கிடைக்கவில்லை என மாணவி உயிரை மாய்த்துள்ளதாகத் தெரியவருகின்றது உயிரிழந்த மாணவியின் தந்தையும் இறுதி யுத்தத்தில் மரணமடைந்ததை அடுத்து... Read more »

மட்டக்களப்பில் மாணவிக்கு போதை மருந்து கொடுத்து வல்லுறவுக்கு உட்படுத்திய மாணவர்கள் கைது!

மட்டக்களப்பில் பாடசாலை மாணவிkகு போதை மருத்து கொடுத்து வன்புணர்விற்குட்படுத்திய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் இருவரை சம்பவம் தொடர்பில் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.... Read more »

யாழில் மக்கள் நடமாடும் இடங்களில் மலக்களிவுகளை கொட்டும் பிரதேசசபை!

யாழ்.நீர்வேலி வடக்கில் தனியார் காணி ஒன்றில் சட்டவிரோதமாக மலக் கழிவுகளை கொட்டிய வலி,கிழக்கு பிரதேசசபை வாகனத்தை பொதுமக்கள் மடக்கி பிடித்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நீர்வேலி இந்து மயானத்திற்கு அருகில் உள்ள வயல்வெளியில் குறித்த கழிவு கொட்டப்பட்ட நிலையில் பிரதேசமக்கள் வாகனத்தை மடக்கிப் பிடித்துள்ளனர்.... Read more »

நாட்டில் சமஸ்டி முறைமையிலான ஆட்சி உருவாக்கப்பட வேண்டும்!-நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்

சமஸ்டி முறையிலான ஆட்சி முறை உருவாக்கப்பட வேண்டும் அது இலங்கையில் தமிழ் மக்களையும் பாதிக்காது, சிங்கள மக்களையும் பாதிக்காது நாட்டை சரியாக கொண்டு செல்லும் என தந்தை செல்வா 1948ஆம் ஆண்டிலே விடுதலைப் பயணத்தை ஆரம்பித்தார் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.... Read more »

மட்டக்களப்பில் தொடரூந்து மோதியதில் ஆண் ஒருவர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு – சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சித்தாண்டி பகுதியில் தொடருந்தில் மோதி ஆணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்றுமுன் தினம் (17.12.2022) பதிவாகியுள்ளது. மாவடிவேம்பை பகுதியை சேர்ந்த பாலச்சந்திரன் சுஜீவகுமார் (வயது 32) என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். தொடருந்தில் மோதி உயிரிழப்பு... Read more »

வியட்நாமில் உயிரிழந்த கிரிதரனின் சடலம் யாழில் அடக்கம் செய்யப்பட்டது!

கனடாவிற்கு சட்ட விரோதமாக படகின் மூலம் சென்ற நிலையில் வியட்நாமில் உயிரிழந்த யாழ் கிரிதரனின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் இன்று அவரது இறுதிக்கிரியைகள் யாழ்ப்பாணத்தில் அமைத்துள்ள அவரது இல்லத்தில் பலரின் கண்ணீருக்கு மத்தியில் இடம்பெற்றது. நாட்டிலிருந்து சட்டவிரோதமாக படகு மூலம் கனடா செல்ல... Read more »

பட்ஜெட் பயத்தால் பதவியை ராஜினாமா செய்த யாழ் தவிசாளர்

பட்ஜெட் தோற்கடிக்கப்படலாம் என்ற பயத்தில் பருத்தித்துறை நகரசபை தவிசாளர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்றைய தினம் பருத்தித்துறை நகர சபையின்2023 ம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு வாக்கெடுப்பு இடம்பெற உள்ளது. இந்த நிலையில் அவர் திடீரென தனது... Read more »