யாழில் மக்கள் நடமாடும் இடங்களில் மலக்களிவுகளை கொட்டும் பிரதேசசபை!

யாழ்.நீர்வேலி வடக்கில் தனியார் காணி ஒன்றில் சட்டவிரோதமாக மலக் கழிவுகளை கொட்டிய வலி,கிழக்கு பிரதேசசபை வாகனத்தை பொதுமக்கள் மடக்கி பிடித்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நீர்வேலி இந்து மயானத்திற்கு அருகில் உள்ள வயல்வெளியில் குறித்த கழிவு கொட்டப்பட்ட நிலையில் பிரதேசமக்கள் வாகனத்தை மடக்கிப் பிடித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வலி கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் கோப்பாய் பொலிசார் விரைந்து சென்று சட்டவிரோதமாக கழிவுகொட்டிய வாகனத்தினை பாதுகாப்பாக மீட்க முயற்சித்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் பிரதேசசபையில் பொறுப்பற்ற செயல் குறித்து மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor