பட்ஜெட் பயத்தால் பதவியை ராஜினாமா செய்த யாழ் தவிசாளர்

பட்ஜெட் தோற்கடிக்கப்படலாம் என்ற பயத்தில் பருத்தித்துறை நகரசபை தவிசாளர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்றைய தினம் பருத்தித்துறை நகர சபையின்2023 ம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு வாக்கெடுப்பு இடம்பெற உள்ளது.

இந்த நிலையில் அவர் திடீரென தனது ராஜினாமாவினை அறிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மற்றும் ஏனைய கட்சியினர் தனது பாதீட்டுக்கு எதிர்த்து வாக்களிக்க உள்ளதாக கிடைத்த தகவலை அடுத்தே தான் ராஜினாமா செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளதாக மேலும் கூறப்படுகின்றது.

Recommended For You

About the Author: webeditor