வரிகளை குறைக்கும் பிரேரணை அடுத்த வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்படும்!

வருமானம் ஈட்டும் போது செலுத்தப்படும் வரிகளை குறைக்கும் பிரேரணை எதிர்வரும் வரவு செலவு திட்ட முன்மொழிவுகளில் உள்ளடக்கப்படும் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பான பிரேரணையை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் சமர்ப்பித்து அதன் அனுமதியைப் பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.... Read more »

அனைத்து விதமான வாகன இறக்குமதிக்கு மீண்டும் அனுமதி!

2025 பெப்ரவரிக்குள் அனைத்து வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளையும் நீக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் மற்றும் ரூபாயின் வலிமை ஆகியவற்றுடன், பெப்ரவரி 2025 க்குள் அனைத்து வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளையும் நீக்க அமைச்சரவை முடிவெடுத்துள்ளதாக என்று வெளியுறவு அமைச்சர் அலி... Read more »
Ad Widget

அமெரிக்காவின் மொத்த கடன்: ரூ.10,502 இலட்சம் கோடி

அமெரிக்க அரசின் கடன் மதிப்பு, முதல் முறையாக 10,502 இலட்சம் கோடி ரூபாயை (இலங்கை ரூபாய்) கடந்து, புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அமெரிக்க அரசின் நிதித்துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தரவுகளின் படி, அமெரிக்காவின் மொத்த கடன் மதிப்பு, கடந்த திங்களன்று 10,502 இலட்சம் கோடி... Read more »

இலங்கை மத்தியவங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (27) நாணயமாற்று விகிதம்.

இலங்கை மத்தியவங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (27) நாணயமாற்று விகிதம். Read more »

அதிகரித்த பணவீக்கம்

தேசிய நுகர்வோர் விலைக் சுட்டெண்ணுக்கு (NCPI) அமைய, நாட்டின் மொத்த பணவீக்கம் 2024ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பதிவான 2.5 வீதத்திலிருந்து 2024 ஏப்ரலில் 2.7 வீதமாக சற்று அதிகரித்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிவித்துள்ளது. அதேபோல்,2024 மார்ச் மாதத்தில்... Read more »

நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்ற தகவல்களினால் பங்குச் சந்தைகள் வீழ்ச்சி: நிலைமையை விளக்குகிறார் ஜனாதிபதி

நாடாளுமன்றம் கலைக்கப்படும் என சிலர் கூறுவதால், அதற்கு அடுத்த நாள் பங்குச் சந்தை வீழ்ச்சியடைகிறது. அப்படி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று அரசாங்கம் அறிவிப்பதால், மீண்டும் பழையை நிலைமைக்கு வருகிறது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விளக்கமளித்துள்ளார். தெல்தெனிய புதிய நீதிமன்ற கட்டடத் தொகுதியை... Read more »

கிறிப்டோ கரன்சி சட்டரீதியானதல்ல – ஏமாற வேண்டாம்: இலங்கை மத்திய வங்கி

இலங்கையில் கிறிப்டோ கரன்சி (crypto currency) எனப்படும் டிஜிட்டல் நாணய அலகு சட்ட ரீதியானதல்ல என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நலந்தலால் வீரசிங்க அறிவித்துள்ளார். நாட்டில் கிறிப்டோ நாணயம் வெகுவாக பயன்படுத்தப்படுவதில்லை எனவும் இந்த நாணய அலகு பயன்பாட்டில் ஆபத்து காணப்படுவதாகவும்... Read more »

ஏப்ரல் மாதத்தில் பணவீக்கம் அதிகரிப்பு

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டியின் அடிப்படையில் ஏப்ரல் மாதத்தில் பணவீக்கம் அதிகரித்துள்ளது. ஆண்டுக்கு ஆண்டு (y-o-y) அடிப்படையில் கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) மூலம் அளவிடப்படும் ஒட்டுமொத்த பணவீக்க விகிதம் ஏப்ரல் மாதம் 1.5 வீதமாக அதிகரித்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும்... Read more »

புலம்பெயர் தொழிலாளர்கள்: கவனத்த ஈர்க்கும் அரசாங்கம்

2024ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் இலங்கைக்கு அனுப்பிய பணம் கணிசமான அளவில் அதிகரித்துள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். புலம்பெயர் தொழிலாளர்கள் இவ்வாண்டில் அனுப்பிய மொத்தத் தொகை 1.53 பில்லியன் டொலர்களை எட்டியுள்ளது. இது கடந்த... Read more »

டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு உயர்வு

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மேலும் உயரும் நிலையில், உணவுப் பொருட்கள் உட்பட இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் பலன்கள் நுகர்வோருக்கு கிடைப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை வகுக்க வர்த்தக அமைச்சகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு மாதங்களுக்குள், ஒரு அமெரிக்க டொலருக்கு ரூபாயின் பெறுமதி... Read more »