காட்டு விலங்குகளால் ஏற்படும் பயிர்ச் சேதங்கள் தொடர்பில் விவசாயிகள் எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளலாம்- லால் காந்தா

காட்டு விலங்குகளால் ஏற்படும் பயிர்ச் சேதங்கள் தொடர்பில் விவசாயிகள் எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளலாம்..- லால் காந்தா வனவிலங்குகளினால் தமது வயல்களில் ஏற்படும் பயிர்ச் சேதங்கள் தொடர்பில் விவசாயிகள் எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ள முடியும் என விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் லால்காந்த... Read more »

தேங்காய்க்கு பஞ்சமில்லை..

நாட்டில் தேங்காய்க்கு தட்டுப்பாடு இல்லை எனவும், சந்தையில் செயற்கையான தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டில் மொத்த தேங்காய் அறுவடை 2,684 மில்லியனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், இது கடந்த வருடத்துடன்... Read more »
Ad Widget

இலங்கை நீதிபதிகள் மற்றும் அரசியல்வாதிகள் மீது வெளிநாட்டில் வழக்குகள் தொடரப்படும் அபாயம்

சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தரணி தலைமையிலான ஒரு அமைப்பு, இலங்கை அரசாங்கம் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு எதிராக அறுபதுக்கும் மேற்பட்ட தடைகள் மற்றும் விசா தடைகளை விதிக்குமாறு கோரிக்கைகளை சமர்ப்பித்துள்ள உலகளாவிய அதிகார வரம்பிற்கு உட்பட்டு தொடர்ச்சியான வழக்குகளை தாக்கல் செய்துள்ளன. இவை அமெரிக்கா,... Read more »

சதோச மூலம் தேங்காய், அரிசி .. ஒருவருக்கு மூன்று தேங்காய்.. ஐந்து கிலோ அரிசி..

இன்று முதல் சதொச கடைகளின் மூலம் ஒரு தேங்காய் 130 ரூபாவிற்கு விற்பனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒரு வாடிக்கையாளர் ஒரே நேரத்தில் மூன்று தேங்காய் மற்றும் ஐந்து கிலோ அரிசியை பெற்றுக்கொள்ள முடியும் என சதொச நிறுவனத்தின் தலைவர் சமித்த பெரேரா குறிப்பிடுகின்றார்.... Read more »

தலைமன்னார் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் 14 இந்திய மீனவர்கள் தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு(04) கைது செய்யப்பட்ட மீனவர்களின் 02 படகுகளும் இதன்போதுகைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட மீனவர்களை கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம்ஒப்படைக்கவுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். தமிழகத்தின் இராமேஷ்வரத்தைச் சேர்ந்த மீனவர்களே... Read more »

வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாரபட்சமின்றி நிவாரணங்கள் வழங்கப்படவேண்டும் – செல்வம் எம்பி

இந்த வெள்ள அனர்த்தத்தில்  வன்னி  மாவட்டங்களான,  வவுனியா, மன்னார்,  முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்கள்  பாரியளவில்  பாதிக்கப்பட்டுள்ளது.  இதிலே பாதிக்கப்பட்ட  அனைவருக்கும் பாரபட்சமின்றி நிவாரணம் வழங்கப்பட  வேண்டுமென்று  வன்னி மாவட்ட  பாராளுமன்ற  உறுப்பினர் செல்வம்  அடைக்கலநாதன்,  அரசாங்கத்திடம்  கோரிக்கை. விடுத்துள்ளார். இன்றைய தினம் (02.12), திங்கள்,... Read more »

அதானியின் மன்னார் காற்றாலை மின் திட்டம் நிறுத்தம்

இந்திய கோடீஸ்வர வர்த்தகர் கௌதம் அதானியின் நிறுவனங்களால் ஆரம்பிக்கப்படவிருந்த மன்னார் காற்றாலை மின் திட்டம் நடைமுறைப்படுத்தப்படாது என ஜனாதிபதி அனுர திஸாநாயக்க குறிப்பிட்டதாக இலங்கை தேசிய வர்த்தக சம்மேளனத்தின் செயலாளர் லக்மால் பெர்னாண்டோ தெரிவித்தார். அத்துடன் குறித்த நிறுவனத்தை விட குறைந்த விலையில் மின்சாரம்... Read more »

பாதிப்படைந்த மக்களின் வாழ்வை நாம் மீளக் கட்டியெழுப்ப வேண்டும். -சரோஜா சாவித்திரி போல் ராஜ்.

அரசாங்கம் என்ற வகையில் சீரற்ற கால நிலையினால் பாதிப்டைந்துள்ள மக்களின் வாழ்வை நாம் மீளக் கட்டியெழுப்ப வேண்டுமென சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்தி அமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜ். தெரிவித்துள்ளார். இன்றைய தினம்(01.12) ஞாயிறு, மன்னாருக்கு வருகை தந்து, சீரற்ற காலநிலையால்,  பாதிக்கப்பட்டு... Read more »

இணையத்தில் போலியான காணொளிகளை வெளியிட்ட இளைஞர் ஒருவர் விளக்கமறியலில்!

அரசுக்கு எதிராக மக்களை தூண்டும் விதத்தில் , வடக்கில் தமிழீழ நினைவேந்தல் நிகழ்வுகளை ஊக்குவிப்பது போன்ற பொய்யான விளம்பரங்கள் மற்றும் காணொளிகளை வெளியிட்ட குற்றத்திற்காக பத்தேகம கிரிபத்தாவில பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு பத்தேகம பதில் நீதவான்... Read more »

மெதிவெல வீடுகள் அரச உறுப்பினர்களுக்கு கூட்டு பயன்பாட்டு முறையில் வழங்கப்படும் – அரசாங்கம் அறிவிப்பு

அமைச்சர்களுக்கு உத்தியோகபூர்வ குடியிருப்புகள் வழங்காமை, வரியில்லா வாகன அனுமதிப்பத்திரம் ரத்து, 5 வருட காலத்திற்கு கடமை அடிப்படையில் அரசாங்க வாகனம் வழங்குதல் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் தொடர்பான தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என அரசாங்கம் மீண்டும் வலியுறுத்துகிறது. அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு வீட்டுமனைகள்... Read more »