கேரளாவில் பதிவான ‘ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல்

இந்தியா, கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் பன்றிகளிடையே பரவக்கூடிய கொடிய தொற்று நோயான ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் பரவியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தொற்றானது, பண்ணையில் வளர்க்கப்படும் பன்றிகள், காட்டுப் பன்றிகள் என இரண்டையும் பாதிக்கும். இவை குறித்த நோய்த் தாக்கத்துக்கு உள்ளான பன்றியிடமிருந்து எளிதாக... Read more »

உமா குமரன்?: வெற்றியும், பின்னணியும்

பிரித்தானிய பொது தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், தொழிற்கட்சி பாரிய வெற்றியை பதிவு செய்து 14 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சியமைக்கவுள்ளது. தொழிற்கட்சி சார்பில் போட்டியிட்ட உமா குமரன், பிரித்தானிய நாடாளுமன்றத்தில் தெரிவுசெய்யப்பட்ட முதல் தமிழ்ப் பெண் என்ற வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். இதன்மூலம் உள்நாட்டுப் போரின்... Read more »
Ad Widget

Euro 2024 தோல்வியுடன் விடைபெற்றார் ரொனால்டோ

நடப்பு Euro 2024 காலிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணி போர்த்துகலை பெனால்டி ஷூட்அவுட் முறையில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதிப் பெற்றுள்ளது. வோக்ஸ்பார்க்ஸ்டேடியன் மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் கோல்கள் எதையும் பெற்றிருக்கவில்லை. இதனையடுத்து இரு அணிகளுக்கும் கூடுதல்... Read more »

LPL – இறுதி ஓவரில் திரில் வெற்றி: ஜப்னா கிங்ஸ் முதலிடம்

லங்கா பிரீமியர் லீக் தொடரில் காலி மார்வெல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஜப்னா கிங்ஸ் அணி ஐந்து விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. இறுதி ஓவரில் 13 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற நிலையில், இரண்டு பந்துகள் மீதமிருக்கையில் ஜப்னா அணி வெற்றியை பதிவுசெய்துள்ளது. தம்புளையில் இடம்பெற்ற... Read more »

தொழிற்கட்சித் தலைவருக்கு மோடி வாழ்த்து: ரிஷிக்கும் பாராட்டு

பிரித்தானிய தேர்தலில் மாபெரும் வெற்றிப் பெற்ற தொழிற்கட்சித் தலைவர் கெய்ர் ஸ்டார்மருக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். தொழிலாளர் கட்சித் தலைவர் நேர்மறையான ஒத்துழைப்பை எதிர்நோக்குவதாகவும் அவர் கூறியுள்ளார். பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார். “இங்கிலாந்து பொதுத்... Read more »

ஒற்றை ஆட்சிக்குள் தமிழ் அரசியலை முடக்க எத்தனிக்கும் ரணில் – கஜேந்திரன்

ஒற்றையாட்சிக்குள் தமிழ் அரசியலை முடக்கும் செயற்பாடுகளை ஜனாதிபதி ரணில் முன்னெடுத்து வருகிறார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். யாழில் இடம்பெற்ற ஊடகசந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், “ஜனாதிபதி... Read more »

பதவி விலகினார் ரிஷி: மனமுடைந்த இறுதி உரை

தொழிற்கட்சி மாபெரும் வெற்றியடைந்துள்ள நிலையில் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் ரிஷி சுனக் பதவி விலகினார். 14 ஆண்டுகால கன்சர்வேடிவ் அரசாங்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, பிரித்தானிய பொதுத் தேர்தலில் தொழிற்கட்சியின் பெரும் வெற்றி வியக்கத்தக்கது. இந்நிலையில் பதவி விலகிய ரிஷி “உங்கள் கோபத்தை நான் அறிந்தேன்,”... Read more »

7 கோடிக்கு ஏலம்போன ‘பேய் புத்தகம்’

புத்தகங்கள் மனிதனின் சிறந்த நண்பன் என்று கூறலாம். ஆனால் மிகவும் பிரபலமான புத்தகமொன்று ரூபாய் 7 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது என்றால் ஆச்சரியம் தானே? ‘Frankenstein: Or, The Modern Prometheus’ என்ற இந்தப் புத்தகம் பெண் எழுத்தாளர் மேரி ஷெல்லியால் எழுதப்பட்டு 1818ஆம்... Read more »

மைத்திரி – தயாசிறி உறவில் புதிய திருப்பம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தயாசிறி ஜயசேகர நீக்கப்பட்டமையை எதிர்த்து அவர் தாக்கல் செய்திருந்த வழக்கை விசாரணைக்கு உட்படுத்திவந்த மேல் நீதிமன்றம், சுதந்திரக் கட்சியின் தீர்மானத்துக்கு நேற்று வியாழக்கிழமை இடைக்கால தடை விதித்தது. இதன் காரணமாக சு.கவின் பொதுச் செயலாளராக... Read more »

தேர்தல்கள் ஆணைக்குழு அதிரடி உத்தரவு

மாகாண ஆளுநர்களினால் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத நியமனங்களை உடனடியாக இரத்துச் செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு உத்தரவு பிறப்பித்துள்ளது. சட்டவிரோத நியமனங்களை உடனடியாக ரத்து செய்யுமாறும், நிலுவையில் உள்ள நியமனங்களை இடைநிறுத்துமாறும் மாகாண ஆளுநர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது. தேர்தல் சட்டம் நடைமுறையில் இருக்கும்... Read more »