பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸை சந்தித்த இந்திய பிரதமர்

குவாட் அமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அவர் ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்து பேசினார். நியூயார்கில் நடைபெற்ற இந்திய வம்சாவளியினரை சந்தித்து உரையாற்றினார். அமெரிக்காவின் நியூயார்க்கில் பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸை இந்திய பிரதமர் மோடி சந்தித்து... Read more »

புதிய அமைச்சரவை நியமனத்தில் நான்கு உறுப்பினர்கள்

புதிய ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய அமைச்சரவை நியமனம் இன்று இடம்பெறாது என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். புதிய ஜனாதிபதி இன்று (23) பதவியேற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்... Read more »
Ad Widget

வட மாகாண ஆளுநர் பதவி விலகல்

வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தனது ஆளுநர் பதவியை இராஜினாமா செய்தார். இது தொடர்பில் அவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தனது இராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார். Read more »

இலங்கையின் ஒன்பாதாவது நிறைவேற்று ஜனாதிபதி: அனுரகுமார திசாநாயக்க

மாக்சிசமென தன்னை அடையாளப்படுத்திய ஜேவிபி என்கிற தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க 5,634,915 வாக்குகளைப் பெற்று இலங்கையின் ஒன்பாதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளரும் 50 வீதத்தை... Read more »

ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி- அநுரவிடம் நாட்டை ஒப்படைக்கின்றேன்: ரணில்

தான் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதாக ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். தற்போது நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையின் படி, புதிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.... Read more »

“இது எம்மனைவரதும் வெற்றியாகும்“: ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க

பல நூற்றாண்டு காலமாக நாங்கள் கண்ட கனவே இறுதியில் நனவாகிக்கொண்டிருக்கிறது. இந்த கனவை நனவாக்குவதற்காக பல சிரமங்களுக்கு மத்தியில் இலட்சக்கணக்கான நீங்கள் அனைவரும் கடந்த காலத்தில் மேற்கொண்ட முயற்சி பலனளித்துள்ளது. அதற்காக என்னால்உங்களுக்கு நன்றிகூற முடியாது. அதற்கான காரணம் அது என்னுடையதல்ல, எமது கூட்டுமுயற்சியின்... Read more »

பதவி விலகிய தென் மாகாண ஆளுநர்

தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன இன்று தனது பதவி விலகினார். புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான சாத்தியக்கூறுககள் காரணமாக தான் பதவி விலகியதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் Read more »

மோடி – பைடன் சந்திப்பு: அமோக வரவேற்பளித்த இந்திய வம்சாவளியினர்

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் அமைப்பின் மாநாடு அமெரிக்காவின் டெல்வாரே நகரில் உள்ள வில்மிங்டனில் நடைபெறுகிறது. குவாட் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். பிலடெல்பியா விமான நிலையத்தில் பிரதமர்... Read more »

இலங்கை வரலாற்றில் மிகவும் அமைதியான தேர்தல்: பஃவ்ரல்

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல், இலங்கை வரலாற்றில் மிகவும் அமைதியான தேர்தலாக இடம்பிடிக்குமென சுதந்திரமானதும் மற்றும் நியாயமானதுமான தேர்தலுக்கான (PAFFREL) அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். தேர்தலின்போது அரச... Read more »

அனுரவிற்கு பலரும் வாழ்த்து: தோல்வியையும் ஒப்புக்கொண்டனர்

தபால்மூல வாக்குகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் பெரும்பாலான மாவட்டங்களில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க முன்னிலை வகிக்கின்றார். இந்நிலையில் இலங்கை ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவின் தோல்வியை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா ஒப்புக்கொண்டுள்ளதோடு... Read more »