ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தார் ஜெனரல் தயா ரத்நாயக்க

இலங்கை இராணுவத்தின் 20 வது தளபதி பதவி வகித்த முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க, ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துக்கொண்டுள்ளார். எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடன் இன்று நடைபெற்ற சந்திப்பின் போது அவர், ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துக்கொண்டார். இதனையடுத்து தயா... Read more »

பகிடிவதையில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு பிணை

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவரை பகிடிவதைக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் இன்று (29) பிற்பகல் பலாங்கொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் தலா ஒரு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். புதிய மாணவர்களை... Read more »
Ad Widget

புதிய தலைவரின் நடவடிக்கைகளில் திருப்தி: கல்முனை கிளை

தமிழரசு கட்சியின் வளர்ச்சிக்கு சிறந்த காத்திரமான முடிவுகளை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அக்கட்சியின் புதிய தலைவர் சிவஞானம் ஶ்ரீதரன் தெரிவித்ததன் மூலம் புதிய உத்வேகத்தோடு கட்சி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென கல்முனைத் தொகுதிக் கிளை நம்பிக்கை தெரிவித்துள்ளது. கடந்த 21ஆம் திகதி வாக்கெடுப்பின் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம்... Read more »

புற்றுநோய்க்கான மருந்துகளுக்கு தட்டுப்பாடு

நாடு முழுவதிலும் உள்ள வைத்தியசாலைகள் புற்றுநோய்க்கான மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர் சங்கத்தின் தலைவர் விசேட வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார். புற்றுநோய்க்கான மருந்துகளின் விலை அசாதாரணமாக அதிகரித்துள்ளதால் புற்றுநோயாளிகள் மேலும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். Read more »

திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்பு – சந்தேக நபர் கைது

சுமார் 8 இலட்சம் பெறுமதியான மோட்டார் சைக்கிளை திருடி சென்ற சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சுமார் 8 இலட்சத்திற்கும் மேல் பெறுமதி வாய்ந்த மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் கடந்த... Read more »

TIN இலக்கத்தை வழங்குவதில் சிக்கல்

18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பிரஜைகளுக்கும் வுஐN இலக்கம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள போதிலும், அது தொடர்பில் பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்கு சொந்தமான போதிய உபகரணங்கள் இல்லாமை போன்ற பல பிரச்சினைகள் காணப்படுவதாக... Read more »

புலமைப்பரிசில் தொகை அதிகரிப்பு

2021 (2022) ஆம் ஆண்டில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு முதன் முறையாக தோற்றி ஒரே தடவையில் சித்தியடைந்து 2024 ஆம் ஆண்டில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள, பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள மாணவர்களுக்கு வழங்கப்படும் புலமைப்பரிசில் கொடுப்பனவை 2024 பெப்ரவரி மாதம் முதல்... Read more »

யாழ்ப்பாண மாவட்டத்தின் புதிய பிரதிப் பொலிஸ்மா அதிபர் பதவியேற்பு

யாழ்ப்பாண மாவட்டத்தின் பிரதிப் பொலிஸ்மா அதிபராக காளிங்க ஜெயசிங்க இன்று பதவியேற்றார். யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை (29) தமது கடமைகளை பொறுப்பேற்றார். Read more »

மாலைத்தீவு ஜனாதிபதிக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம்

மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் முய்சுவுக்கு எதிராக அந் நாட்டு பிரதான எதிர்க்கட்சியான மாலைத்தீவு ஜனநாயகக் கட்சி (MDP), பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வருவதற்கு தீர்மானித்துள்ளது. இந்தியா போன்ற நட்பு நாடுகளுடன் மாலைத்தீவு அண்மைய காலமாக இராஜதந்திர மோதலில் ஈடுபட்டுள்ள நிலையில் அந் நாட்டு... Read more »

சோமாலிய அதிகாரிகளுடன் இராஜதந்திரிகள் பேச்சு: இந்தியாவிடம் உதவிகோரல்

இரண்டு நாட்களுக்கு முன்னதாக சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மீன்பிடி இழுவை படகு மற்றும் 6 மீனவர்கள் தொடர்பில் அறிந்துகொள்ளும் வகையில் சோமாலிய அதிகாரிகளுடன் இலங்கை இராஜதந்திரிகள் பேச்சுவார்த்தை நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யேமனை தளமாகக் கொண்ட ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலுக்கு எதிராக செங்கடலில் பயணிக்கும்... Read more »