ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் விசேட அறிவிப்பு

புலமைப்பரிசில் பரீட்சைக்கு இணையவழி முறையின் ஊடாக விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்று (27) முதல் ஆரம்பிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இதன்படி எதிர்வரும் ஜூன் மாதம் 14 ஆம் திகதி வரை இணையவழி முறையின் ஊடாக விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்... Read more »

மின் கட்டண திருத்தம் தொடர்பில் மௌனம் காக்கும் மின்சார சபை

மின் கட்டணத் திருத்தம் தொடர்பிலான முன்மொழிவை எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதியாகும் போது இலங்கை மின்சார சபை மூலம் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு சமர்பிக்க வேண்டிய நிலையில் இதுவரையில் அது தொடர்பிலான முன்மொழிவுகள் எதுவும் சமர்பிக்கப்படவில்லை என ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் சிங்கள ஊடகமொன்றுக்கு... Read more »
Ad Widget

முடிவுக்கு வருகின்றதா யுக்ரைன் போர்?

உக்ரைன் மீதான போருக்கு முடிவு கட்டும் வகையில், தாம் யுத்த நிறுத்தம் ஒன்றுக்குத் தயார் என்று புட்டின் அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால், நேட்டோ நாடுகள் உக்ரைன் விடையத்தில் தலையிடாமல் இருந்தால், இந்த யுத்த நிறுத்தம் சாத்தியம் என்று புட்டின் தெரிவித்துள்ளதாக... Read more »

உயிர் சேதத்தை தடுக்க மருந்துகளின் தரம் பரிசோதிக்கப்பட வேண்டும்

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் பதவிக்காலத்தில் முறையான பதிவுகள் இன்றி, மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான மருந்துகளின் தரம் சரிபார்க்கப்படாமல் 306 தடவைகள் இலங்கைக்கு மருந்துகள் கொண்டுவரப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது குறித்த மருந்துகள் வைத்தியசாலைகளில் பயன்பாட்டிலுள்ள நிலையில் வெகு விரைவில் அவற்றை... Read more »

பிரபல தொழிலதிபருடன் புதிய கூட்டணி அமைக்கும் விமல்?

நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவங்ச, ரொஷான் ரணசிங்க மற்றும் தொழிலதிபர் திலித் ஜயவீர ஆகியோர் புதிய அரசியல் கூட்டணியை ஆரம்பிப்பது தொடர்பில் ஆரம்பக்கட்ட கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பு அரசியல் தகவல்களை மேற்கோள்காட்டி சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம்... Read more »

கிரிக்கெட் தொடர்பில் பொய் சொன்ன சமூக ஊடக குழு மீது ஹரின் வழக்கு

விளையாட்டுத்துறையில் ஊழலை தடுப்பதற்காகவே தான் சட்டத்தை கொண்டு வந்ததாகவும், அதனை அறியாதவர்கள் தன்னையும் சனத் ஜயசூரியவையும் குற்றம் சுமத்தி வருவதாக விளையாட்டு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 2019 பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் சூதாட்டத்தில் ஈடுபடும் எவரும் விளையாட்டுக்கு... Read more »

2024 ஐபிஎல் இறுதிப் போட்டி: மூன்றாவது முறையாக மகுடம் சூடியது கொல்கத்தா அணி

2024 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மகுடத்தை சூடியது. 114 என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி 10.3 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. இதன்படி, கொல்கத்தா... Read more »

சூடு பிடிக்கும் பிரித்தானிய தேர்தல் களம்

பிரித்தானியாவில் பொது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் 78 பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து பின்வாங்கியுள்ளனர். அமைச்சரவை அமைச்சர்களான மைக்கேல் கோவ் மற்றும் ஆண்ட்ரியா லீட்சம் ஆகியோரும் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற முடிவை... Read more »

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் பலருக்கு தொடர்பு?

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் இந்நாட்டில் இருக்கிறார்களா என்பதை கண்டறிய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் தற்போது அவசர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். கடுவெல பிரதேசத்தில் இடம்பெற்ற வெசாக் திருவிழாவில் இன்று (26) கலந்து... Read more »

சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்தினத்தை பிரதம நீதியரசராக்க ஜனாதிபதி திட்டம்

சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்தின் பதவிக் காலத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பரிந்துரைத்துள்ளார். இதன்படி, ஆறு மாத சேவை நீட்டிப்பு வழங்குவதற்கான பரிந்துரை ஏற்கனவே அரசியலமைப்பு பேரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜூன் முதல் வாரத்தில் நாடாளுமன்றம்... Read more »