மது போதையில் நண்பனின் மனைவியின் அறைக்கு சென்றவரால் ஏற்ப்பட்ட விபரீதம்

மட்டக்களப்பில் நண்பன் ஒருவரின் மனைவியை திருமணம் செய்து உறவில் ஈடுபட வருமாறு அழைத்து அவர் மீது தாக்குதல் நடாத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இளைஞனை எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று உத்தரவிட்டார். மட்டு... Read more »

தமிழர் பகுதியில் புதிய பொலிஸ் பொறுப்பதிகாரி நியமனம்

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரியாக W.D.P. கொஸ்தா பொலிஸ்மா அதிபரினால் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஏழு வருட காலமாக வட்டுக்கோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய சமன் குணதிலக அனுராதபுரம் ஹிடோகம பொலிஸ் நிலையத்திற்கு பொலிஸ்மா அதிபரினால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதே ஹிடோகம பொலிஸ் நிலையத்தில்... Read more »
Ad Widget

உலக தரவரிசையில் முதலிடம் பெற்ற இலங்கை பல்கலைக்கழகம்

உலக பல்கலைக்கழகங்களின் ‘வெபோமெட்ரிக்ஸ்’ தரவரிசையின் படி இலங்கைப் பல்கலைக்கழகங்களில் கொழும்புப் பல்கலைக்கழகம் முதலிடத்தைப் பெற்றுள்ளது. இதற்கமைய,ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் இரண்டாமிடத்தையும், பேராதனை பல்கலைக்கழகம் மூன்றாமிடத்தையும், மொரட்டுவ பல்கலைக்கழகம் நான்காவது இடத்தையும் பெற்றுள்ளன. இந்த வரிசையில், ருஹுணு, களனி, ரஜரட்டை, யாழ்ப்பாணம், வடமேற்கு, கிழக்கு, சப்ரகமுவ... Read more »

வட கிழக்கில் தமிழ் எம்.பிக்களுக்கு அமைச்சு பதவி

சர்வக்கட்சி அரசாங்கத்தில் முன்னாள் அமைச்சர்களான ஜோன்ஸ்டன், நாமல், பவித்ரா, சந்திரசேன, ரோஹித, லன்சா மற்றும் எஸ்.பி.திஸாநாயக்க ஆகியோருக்கு அமைச்சு பதவிகளை வழங்க பொதுஜன பெரமுன ஜனாதிபதியிடம் பரிந்துரைக்கவுள்ளது. அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்களான அதாவுல்லா, சிவநேசத்துறை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மற்றும் சி.வி.விக்கினேஷ்வரன் ஆகியோருக்கு அமைச்சு பதவிகள்... Read more »

ஜனாதிபதியால் விசேட வர்த்தமானி வெளியீடு!

இலங்கையில் கடந்த மாதம் ஜூலை 18ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் (Ranil Wickremesinghe) வெளியிடப்பட்ட அவசரகால சட்டத்தின் பல சரத்துக்கள் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் திருத்தப்பட்டுள்ளன. இதன்படி, தேடுதல் மற்றும் கைது தொடர்பான குற்றவியல் சட்டத்தின் பிரிவுகள் 365 (a) மற்றும்... Read more »

தனியார் கைகளுக்கு செல்லும் 40 அரச நிறுவனங்கள்

சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் வசதியை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் 40 அரச நிறுவனங்களை தனியார்மயப்படுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். இது தொடர்பான யோசனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் சந்தர்ப்பத்தில் அதற்கு எதிர்க்கட்சி ஒத்துழைப்பை வழங்க... Read more »

யாழை சேர்ந்த யுவதி ஒருவர் வெளிநாடொன்றில் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் நெல்லியடி வதிரிப் பகுதியைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் ஹாங்காங் நாட்டில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்தில் ஹாங்காங் எனும் இடத்தில வசித்து வந்த யாழ்.நெல்லியடி வதிரி பகுதியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயார் புற்று நோய் காரணமாக நேற்று... Read more »

பாடசாலை நடைபெறும் நாட்களில் மாற்றம்

அடுத்த வாரம்(08 – 12) பாடசாலைகள் நடத்தும் நாட்களில் கல்வி அமைச்சு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. இதன்படி, நாளை முதல்(08) ஆரம்பமாகும் புதிய வாரத்தில் திங்கள், செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் பாடசாலைகளை நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய... Read more »

ஒன்பதாம் திகதி இலங்கையில் ஏற்பட இருக்கும் மாற்றம்!

வரும் ஒன்பதாம் திகதியும் மக்கள் தெருவில் இறங்குவார்கள் என்ற தொனிப்பட சரத் பொன்சேகா எச்சரித்திருந்தார். அவர் அவ்வாறு கூறியதை அரகலயக்காரர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிகிறது. சரத் பொன்சேகா அரகலயவை “ஹைஜாக் “ பண்ணப் பார்க்கிறார் என்று ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த மூன்று மாத... Read more »

இலங்கை படையினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரும் ஜ நா மனித உரிமை ஆணையாளர்

இலங்கை பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள தருணத்தில், இலங்கைப் படையினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் எதற்கு கூறினார் என்பது தொடர்பில் ஆராய்கின்றோம் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். ஊடக சந்திப்பொன்றின் போது இன்று(07) இது தொடர்பில்... Read more »