இரவோடு இரவாக எரிபொருள் விலை அதிகரிப்பு!

நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் பெட்ரோல் விலையை அதிகரித்துள்ளது. இதன்படி, லங்கா பெட்ரோல் 92 ஒக்டேனின் விலை 370 ரூபாவிலிருந்து 30 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை அதற்கமைய , புதிய விலை லீட்டருக்கு ரூபா 400... Read more »

அரச ஊழியர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி

நாட்டில் எந்தவொரு அரச நிறுவனத்தையும் மூடுவதற்கு தீர்மானம் எடுக்கப்படவில்லை என பிரதமர் தினேஷ் குணவர்தன (Dinesh Gunawardena) தெரிவித்துள்ளார். இலங்கையின் தற்போதைய பொருளாதார மற்றும் சமூக நிலைமைகள் தொடர்பில் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் டெம்பிள் ஹவுஸில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்ட போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.... Read more »
Ad Widget

இன்றைய ராசிபலன் 02.02.2023

மேஷம் மேஷம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். நினைத்ததை முடிக்கும் நாள். ரிஷபம்... Read more »

யாழில் விழித்தெழு வீதி நாடகம் ஆற்றுகை செய்யப்பட்டது

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கூத்தாட்டு அவைக்குழாத்தினரது ‘ விழித்தெழு ‘ என்னும் பெயரில் அமைந்த வீதி நாடகம் இன்று (01 – 02- 2023) யாழ்ப்பாணம் இந்திய கலாசார மத்திய நிலையத்தில் ஆற்றுகை செய்யப்பட்டது. வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன்... Read more »

ஐஸ் போதைப்பொருளுடன் 24 வயது இளம் போதை வியாபாரி கைது

மட்டக்களப்பு அரசடியைச்சேர்ந்த 24 வயதுடைய இளம் போதை வியாபாரி இன்று (01) பிற்பகல் 2 மணியளவில் ஏறாவூர் சவுக்கடியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத்தகவலுக்கமைய களுவாஞ்சிக்குடி விஷேட அதிரடிப்படையினருடன் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இவர்... Read more »

திருகோணமலை கலைமகள் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற உலக ஈர நிலங்கள் தினம்

உலக ஈரநிலங்கள் தினத்தினை (Feb. 02) முன்னிட்டு மாணவர்கள் மத்தியில் ஈரநிலங்களின் முக்கியத்துவம் அதன் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வினை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்கில் Green Forest Globe அமைப்பின் அனுசரணையில் திருகோணமலை கலைமகள் மகா வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் நா.காளிராசா தலைமையில் நடைபெற்றது.... Read more »

பால்மா குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!

மில்கோ நிறுவனம், மனித நுகர்வுக்குத் தகுதியற்ற 635 மெட்ரிக் பால்மாவை அனுமதியின்றி கால்நடைத் தீவனத்திற்காக நிறுவனமொன்றுக்கு விற்பனை செய்தமை குறித்து விவசாய அமைச்சு விசாரணையைத் தொடங்கியுள்ளது. பால்மாவை விற்பனை செய்ய வேண்டாம் என அமைச்சின் செயலாளர் உத்தரவிட்டிருந்த போதிலும், மில்கோ நிறுவனத்தின் உயர் அதிகாரிகள்,... Read more »

பேருந்து மற்றும் ரயில் டிக்கெட்டுகளுக்குப் பதிலாக புதிய போக்குவரத்து அட்டை

பேருந்து மற்றும் ரயில் டிக்கெட்டுகளுக்குப் பதிலாக புதிய போக்குவரத்து அட்டையை அறிமுகப்படுத்துவதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத் தானது. போக்குவரத்து அமைச்சு, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் இலங்கை போக்குவரத்து சபையை உள்ளடக்கி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. மாகும்புர காலி அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்துகளுக்கான இந்தப் புதிய... Read more »

கொழும்பு செல்லும் சாரதிகளுக்கான முக்கிய அறிவித்தல்!

75வது தேசிய சுதந்திர தின விழா மற்றும் ஒத்திகை காரணமாக காலி முகத்துவார வீதியை பயன்படுத்தும் சாரதிகளுக்கு பொலிஸார் அறிவித்தல் விடுத்துள்ளனர். சுதந்திர தின ஒத்திகை மற்றும் சுதந்திர தினத்தின் போது சாரதிகள் முடிந்தளவு மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால்... Read more »

இலங்கை வரும் அமெரிக்க துணைச் செயலாளர்

அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான துணை இராஜாங்கச் செயலாளர் விக்டோரியா நுலண்ட் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். இவலர் சற்று முன்னர் இலங்கையை வந்தடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் பொருளாதார சுபீட்சத்தை எட்டும் முனைப்புக்களுக்கு உதவும் வகையில் இந்த விஜயம் அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கவனம் செலுத்தப்பட்டுள்ள... Read more »