மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணிக்குள் குழப்பத்தை ஏற்ப்படுத்த முயலும் புலனாய்வாளர்கள்!

வடக்கு, கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தாலுடன் யாழ். பல்கலைக்கழக முன்றலில் இருந்து மட்டக்களப்பு நோக்கிய இந்த சுதந்திர தின எதிர்ப்பு கறுப்பு பேரணி முன்னெடுக்கப்படுகிறது. தமிழர் தாயகத்தின் மீதான ஆக்கிரமிப்பை நிறுத்து, தடைகளை உடைப்போம், அபகரிக்கப்பட்டுள்ள எமது நிலங்களை திருப்பிக்கொடு, தமிழர் தேசம் எமது... Read more »

இலங்கையின் சுதந்திரதின நிகழ்வில் கலந்து கொள்ளும் முக்கிய நாடுகளின் இராஜதந்திரிகள்

இலங்கையின் 75ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகளை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வில் ஏழு நாடுகளை பிரதிநிதிதுவப்படுத்தும் வகையில் அந்நாட்டு இராஜதந்திரிகள் கலந்து கொண்டிருந்தனர். இலங்கையின் 75ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் இன்று காலை கொழும்பு காலிமுகத்திடலில் ஜனாதிபதி தலைமையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவின்... Read more »
Ad Widget

இத்தாலிக்கு அருகே படகு மூழ்கியதில் 8 புலம்பெயர்ந்தோர் உயிரிழப்பு!

இத்தாலியில் அருகே உள்ள தீவொன்றில் படகொன்று மூழ்கியதில் 8 புலம்பெயர்ந்தோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், கப்பலில் பயணித்த 40 பேரை இத்தாலிய கடலோரக் காவல்படையினர் இரவோடு இரவாக மீட்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்டவர்கள் சிசிலியின் தெற்கே அமைந்துள்ள லம்பேடுசாவில் உள்ள... Read more »

நாடாளுமன்றிற்கு அருகில் போராட்டம் ஆரம்பம்!

சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பலர் இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். போராட்டக்காரர்கள் வீதியோரத்தில் போராட்டம் நடத்தி வருவதால் அருகில் உள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை மற்றுமொரு மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த போராட்டம் பிற்பகல் ஆரம்பமாகவுள்ளமை... Read more »

மட்டக்களப்பு கல்லடிப்பாலத்தில் எமது இனத்தின் சுதந்திரத்துக்காக ஒன்றுகூடுவோம் உங்கள் ஆதரவை வழங்குங்கள்

75 வருடங்களாக எமது மக்களுக்கு மறுக்கப்பட்ட சுதந்திரம். பல ஜனாதிபதிகள் மற்றும் பிரதமர்கள் ஆட்சி செய்தும் மறுக்கப்பட்ட எமது உரிமைகள். என்றும் பெப்ரவரி 4 ஆம் திகதி தமிழருக்கு இருள் தினமாகும். எமது உரிமைகளை நாம் பெற்றெடுக்க வேண்டும் எமது இனமும் சம உரிமையுடன்... Read more »

அம்பாறை பக்மிட்டியாவ வனப்பகுதியில் பயிரிடப்பட்ட கஞ்சா பாதுகாப்பு தரப்பினரால் அழிக்கப்பட்டுள்ளது

அம்பாறை பக்மிட்டியாவ வனப்பகுதியில் ஒரு ஏக்கரில் கஞ்சா பயிரிடப்பட்ட வந்த நிலையில் நேற்று 03/02/2023 மாலை கைப்பற்றப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று இராணுவ புலனாய்வு பிரிவுக்கு 3(V) MICகு கிடைத்த தகவலின்படி, இராணுவ புலனாய்வு பிரிவினர் மற்றும் அருகம்பை விஷேட அதிரடிப்படையினர் ஆகியோர் இணைந்து நடாத்திய தேடுதலில்... Read more »

நாட்டில் அறிமுகமாக இருக்கும் டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரம்!

நாட்டில் டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையில் ஒழுக்கமான சாரதிகளை உருவாக்கும் நோக்கில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரத்தை, தமது கையடக்கத் தொலைபேசியின் ஊடாக... Read more »

இலங்கையில் இருந்து மேலும் நான்கு பேர் தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்

இலங்கையில் இருந்து இராமேஸ்வரத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து நேற்று இரவு நான்கு பேர் தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளது தெரிய வந்துள்ளது. மன்னாரில் படகு மூலம் சென்று நேற்று இரவு 10 மணியளவில் இவ்வாறு தஞ்சமடைந்துள்ளனர். புங்குடுதீவைச்... Read more »

நகைக்கடை உரிமையாளர் ஒருவர் சடலமாக மீட்பு!

புதுக்குடியிருப்பு பகுதியில் பிரபல நகை கடை உரிமையாளர் ஒருவர் இன்று (03-02-2023) காலை சடலமாக மீட்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் உள்ள கலையரசி நகை கடை உரிமையாளரான 53 வயதுடைய பழநிநாதன் நெடுஞ்செழியன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 1 ஆம் வட்டாரம்... Read more »

இன்றைய தினம் வடக்கில் இருந்து கிழக்கு நோக்கி நடைபெற இருக்கும் எழுச்சி குறித்து விக்னேஸ்வரன் கூறியுள்ள விடயம்

இன்றைய தினம்(04.02.2023) சிங்களப் பெரும்பான்மையினருக்கு சுதந்திர தினமாக அமையினும் அவ்வாறு அவர்கள் கொண்டாடுவார்கள் எனினும் வடக்கு கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்களுக்கு இது சுதந்திரமற்ற, உரிமைகள் அற்ற, சிங்கள ஏகாதிபத்தியத்திற்கு அடிமைப்பட்டிருக்கும் ஒரு நாளாகவே அவர்கள் அதனைப் பார்க்கின்றார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர்... Read more »