ரஞ்சன் ராமநாயக்க குறித்து சஜித் விடுத்துள்ள வேண்டுகோள்!

நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் சிறைப்படுத்தப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலை அரை விடுதலை என்று எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய சஜித் பிரேமதாச, பொதுமன்னிப்பின் கீழ் ரஞ்சன் ராமநாயக்க விடுதலை செய்யப்பட்டுள்ளார். இதற்கு சபாநாயகரின் முழுமையான ஒத்துழைப்பும் இருந்தது.

அரை விடுதலை
எனினும் விடுதலை செய்யப்பட்ட அவருக்கு வாக்களிக்கவோ, தேர்தலில் பங்கேற்கவோ அதிகாரமில்லை. எனவே அவரின் விடுதலை முழுமை விடுதலை அல்ல. அரை விடுதலை அல்லது 50 வீதமான விடுதலை என்று சஜித் குறிப்பிட்டார்.

இந்தநிலையில் சபாநாயகர் இந்த விடயத்தில் தலையிட்டு, ரஞ்சன் ராமநாயக்கவுக்கு முழு உரிமைகளும் கிடைக்க செய்யவேண்டும் என்று சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor