பரிசை நோக்கி புறப்பட்ட எயார் பிரான்ஸ் விமானம் ஒன்று புறப்பட்ட சில நொடிகளிலேயே தரையிறக்கப்பட்டது.
சனிக்கிழமை இரவு Fort-de-France (Martinique) விமானநிலையத்தில் இருந்து எயார் பிரான்ஸ் விமானம் AF895 (போயிங் 777) புறப்பட்டது. பரிசை நோக்கி பயணிகளுடன் புறப்பட்ட இந்த விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே இயந்திரக் கோளாறு என அறிவிக்கப்பட்டது.
‘இயந்திரத்தில் இருந்து எரியும் மணம் எழுந்ததாக’ பல பயணிகள் அதிர்ச்சியுடன் தெரிவித்தனர்.
விமானத்தின் இயந்திரத்தில் பழுது ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு, உடனடியாக அது மீள தரையிறக்கப்பட்டு, அவசரமாக பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.
விமானக்குழுவுடன் சேர்த்து 469 பேர் விமானத்தில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

