கடல் எல்லைகளில் அமெரிக்காவின் அதிரடி: ‘வெரோனிகா III’ கப்பல் இடைமறிப்பு!
“நிலம், நீர், ஆகாயம் என எங்கு ஒளிந்தாலும் உங்களைக் கண்டுபிடித்து நீதியின் முன் நிறுத்துவோம்!” என்கிறது அமெரிக்கா!
தாய்நாட்டைப் பாதுகாப்பதில் தூரம் ஒரு தடையல்ல என்பதை அமெரிக்கப் படைகள் மீண்டும் நிரூபித்துள்ளதாக அமெரிக்கா கூறுகிறது. சர்வதேச கடல் பரப்பில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு இதுவொரு எச்சரிக்கை செய்தியாக அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
ஜனாதிபதி ட்ரம்பின் ‘குவாரன்டைன்’ (Quarantine) உத்தரவை மீறி, மறைமுகமாகத் தப்பிச் செல்ல முயன்ற ‘வெரோனிகா III’ (Veronica III) என்ற கப்பலை அமெரிக்கப் படைகள் வெற்றிகரமாக இடைமறித்துள்ளன.
கரீபியன் கடலில் இருந்து இந்தியப் பெருங்கடல் வரை நீண்ட தூரம் இக்கப்பலை அமெரிக்கப் படைகள் பின்தொடர்ந்தன. INDOPACOM (இந்தோ-பசிபிக் கட்டளைத் தளம்) எல்லைக்குட்பட்ட பகுதியில், எவ்வித அசம்பாவிதமும் இன்றி அமெரிக்கப் படைகள் கப்பலில் ஏறிச் சோதனை நடத்தின (Right-of-visit & Maritime Interdiction).
சட்டவிரோதக் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மற்றும் அவர்களின் முகவர்களின் நடமாட்டத்தை கடல் பகுதிகளில் முற்றிலுமாக முடக்குவதே அமெரிக்க ‘யுத்தத் துறையின்’ (Department of War) இலக்காகும் என கூட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உலகின் எந்த மூலையில் இருந்தாலும், அமெரிக்காவின் கண்காணிப்பில் இருந்து தப்ப முடியாது என்பதை இந்த நடவடிக்கை உணர்த்துவதாகவும், சர்வதேச கடல் பகுதியைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி நீதியில் இருந்து தப்பிக்க முடியாது எனவும் கூறப்பட்டுள்ளது.
இவ்வளவு நீண்ட தூரம் பின்தொடர்ந்து ஒரு கப்பலைச் சட்டத்தின் முன் நிறுத்தும் வலிமையும், விடாமுயற்சியும் அமெரிக்கப் படைகளுக்கு மட்டுமே உண்டு எனவும், “நிலம், நீர், ஆகாயம் என எங்கு ஒளிந்தாலும் உங்களைக் கண்டுபிடித்து நீதியின் முன் நிறுத்துவோம்!” என்பதே இந்த நடவடிக்கையின் மூலம் வழங்கப்பட்டுள்ள தெளிவான செய்தி எனவும் அமெரிக்க பாதுகாப்பு தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

