அடுத்து கோத்தாவும் எடுபிடிகளும் உள்ளே..?

அடுத்து கோத்தாவும் எடுபிடிகளும் உள்ளே..?

2022 ஆம் ஆண்டின் மே 09 ஆம் திகதி நடந்த அமைதியின்மை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மனுவில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது விசுவாசிகளிற்கு அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

‘அரகலய’ மக்கள் போராட்டத்தின் மீதான தாக்குதலைத் தொடர்ந்து நாடு முழுவதும் வெடித்த வன்முறை சம்பவங்களின் போது, முன்னாள் அமைச்சர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டது.அப்போது ஏற்பட்ட சேதங்களுக்கு, முன்னாள் அமைச்சர்களால் சட்டவிரோதமாகப் பெறப்பட்டதாகக் கூறப்படும் இழப்பீட்டை மீட்டெடுக்கக் கோரி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, முன்னாள் காவல்துறை அதிபர் சி.டி. விக்ரமரத்ன, முன்னாள் கடற்படைத் தளபதி நிசாந்த உலுகேதென்ன, முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர்கள் பிரசன்ன ரணதுங்க மற்றும் டிரான் அலஸ் மற்றும் முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜகத் அல்விஸ் ஆகியோருக்கு நீதிமன்ற உத்தரவின்படி நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது.

Recommended For You

About the Author: admin