தாய்வானைச் சுற்றி சீனா கூட்டு இராணுவப் பயிற்சி
தாய்வானைச் சுற்றி கூட்டு இராணுவப் பயிற்சிகளை நடத்துவதற்காக விமானப்படை, கடற்படை மற்றும் ஏவுகணைப் படைகள் அனுப்பப்பட்டு உள்ளது என சீன இராணுவம் தெரிவித்துள்ளது.
தாய்வான் தனி நாடு அல்ல, அது சீனாவின் ஒரு பகுதி என்று தொடர்ந்து சீனா கூறி வருகிறது. இதனை தாய்வான் ஏற்க மறுக்கிறது. எங்களுக்கென்று தனி இறையாண்மை உள்ளது. நாங்கள் தனி நாடு தான் என தாய்வான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று (29) பிரிவினைவாத மற்றும் வெளிநாட்டு தலையீடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், தாய்வானைச் சுற்றி கூட்டு இராணுவப் பயிற்சிகளை நடத்துவதற்காக விமானப்படை, கடற்படை மற்றும் ஏவுகணைப் படைகள் அனுப்பப்பட்டுள்ளதாக சீன இராணுவம் தெரிவித்துள்ளது. சீனாவின் இத்தகைய அறிவிப்பால் கிழக்கு ஆசியப் பகுதியில் போர் பதற்றம் நிலவி வருகிறது.
அண்மையில், தாய்வானுக்கு எதிராக சீனா நடவடிக்கை எடுத்தால், ஜப்பானிய இராணுவம் தலையிடக்கூடும் என்று ஜப்பான் பிரதமர் சனே தகைய்ச்சி கூறியிருந்தார். இதற்கு சீன இராணுவம் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.
தற்போது சீன இராணுவம் கூட்டு இராணுவ பயிற்சி குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஜப்பானைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை…


