உயிரிழப்புகள் 607 ஆக அதிகரிப்பு! – கடந்த இருபது ஆண்டுகளில் மிக மோசமான அனர்த்தம் !
கடந்த இருபது ஆண்டுகளில் இலங்கையில் ஏற்பட்ட மிக மோசமான இயற்கை அனர்த்தமான ‘டிட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 607 ஆக உயர்ந்துள்ளது என்று அதிகாரிகள் இன்று (டிசம்பர் 5) வெளியிட்ட புதிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட பல மாவட்டங்களில் குறைந்தது 214 பேர் இன்னும் காணாமல் போனவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

