இலங்கையில் பாதுகாப்பில்லையாம் – அவுஸ்திரேலிய அரசாங்கம் எச்சரிக்கை

இலங்கைக்கு வருகைதரும் மற்றும் இலங்கையில் தங்கியுள்ள அவுஸ்திரேலியர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புதுப்பிக்கப்பட்ட பயண ஆலோசனையில், பொதுமக்களின் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பாதுகாப்பு அபாயங்கள் காரணமாக அவுஸ்திரேலியர்கள் இலங்கையில் அதிக அளவு எச்சரிக்கையுடன் இருக்குமாறு அவுஸ்திரேலிய அரசாங்கம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகிறது.

அத்துடன், ஆர்ப்பாட்டங்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளைத் தவிர்க்குமாறும், உள்ளூர் அதிகாரிகளின் ஆலோசனையைப் பின்பற்றுமாறும், புதுப்பிப்புகளுக்கு ஊடகங்களைக் கண்காணிக்குமாறும் அவுஸ்திரேலியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்கள், துன்புறுத்தல் மற்றும் கொள்ளை உள்ளிட்ட குற்றங்கள் நிகழலாம் என்றும் அவுஸ்திரேலிய அரசாங்கம் அந்த நாட்டு பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Recommended For You

About the Author: admin