பூநகரி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற செயற்கை நுண்ணறிவு(AI) தொடர்பான பயிற்சி .!
பூநகரி பிரதேச செயலக அலுவலர்களின் திறன் விருத்தியினை அதிகரிப்பதன் நோக்கமாக செயற்கை நுண்ணறிவு(AI) தொடர்பான பயிற்சி நெறி ஒன்று இன்றைய தினம் (18.11.2025) யாழ் பல்கலைக் கழகத்தில் இடம்பெற்றது.
குறித்த பயிற்சி நெறியில் பிரதேச செயலாளர், உதவிப் பிரதேச செயலாளர், கணக்காளர் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் 70 பேர் பங்கு பற்றியிருந்தனர்.


