இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த 14 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினரும், கடலோர காவல்படையினரும் நேற்று இரவு யாழ்ப்பாணம் அனலைதீவு அருகே வைத்து கைது செய்தனர்.
மேலும், அவர்களது ஒரு படகையும் பறிமுதல் செய்தனர்.
வடக்கு கடற்படை கட்டளைப் பிரிவினர், இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இந்திய மீன்பிடிப் படகுகள் குழுவொன்றை அவதானித்தனர்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, இந்தியப் படகுகளை விரட்டுவதற்காக வடக்கு கடற்படை கட்டளைப் பிரிவும், இலங்கை கடலோர காவல்படையும் தங்களது படகுகளைப் பயன்படுத்தின.
இருப்பினும், கடற்படையினரின் தீவிர நடவடிக்கையைத் தொடர்ந்து, அத்துமீறி சட்டவிரோத மீன்பிடியில் தொடர்ந்து ஈடுபட்டிருந்த இந்திய மீன்பிடிப் படகு ஒன்றை மடக்கிப் பிடித்து, அதிலிருந்த 14 இந்திய மீனவர்களைக் கைது செய்தனர்.

