மீசாலை பொது நூலகத்தின் தேசிய வாசிப்பு மாத பரிசளிப்பு விழா..!

மீசாலை பொது நூலகத்தின் தேசிய வாசிப்பு மாத பரிசளிப்பு விழா..!

சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் மீசாலை பொது நூலகத்தின் தேசிய வாசிப்பு மாதப் பரிசளிப்பு விழா எதிர்வரும் 07.11.2025 வெள்ளிக்கிழமை

​பிற்பகல் 2:30 மணிக்கு

​சாவகச்சேரி, பொன்விழா மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

 

​சாவகச்சேரி நகரசபைத் தவிசாளர், வ.ஸ்ரீபிரகாஸ் தலைமையில் இடம்பெறவுள்ள மேற்படி நிகழ்வில்

​பிரதம விருந்தினராக தென்மராட்சி பிரதேச செயலர் பிரான்சிஸ் சத்தியசோதியும்,

​சிறப்பு விருந்தினராக தென்மராட்சி கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் செல்வி இ. அபிராமியும்,

​கௌரவ விருந்தினர்களாக

​யா/மீசாலை விக்னேஸ்வரா மகாவித்தியாலய அதிபர் திருமதி சுதாமதி தயாபரன்,

​யா/மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி பிரதி அதிபர் திருமதி கஜேந்தினி மகிந்தன்,

​யா/மீசாலை வீரசிங்கம் ஆரம்பப் பாடசாலையின் பதில் அதிபர், கந்தசாமி சத்தியானந்தன் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

 

​இதன்போது விசேட நிகழ்வாக “மாந்துளிர்” என்ற நூல் வெளியீட்டு வைபவம் இடம்பெற உள்ளது.

​அத்துடன் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin