மரதானவில் விசேட சுற்றிவளைப்பு: பிடியாணை மற்றும் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 30 பேர் கைது!
சனிக்கிழமை மாலை (செப்டம்பர் 27) மரதான பகுதியில் பொலிஸாரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பிடியாணை மற்றும் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 30 சந்தேகநபர்கள் இந்த சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விசேட நடவடிக்கை இலங்கை இராணுவத்தின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

