ஊடகவியலாளர் நிர்மலராஜன் எதற்காக யாரால் கொலை செய்யப்பட்டா்?
– ஈ.பி.டி பி. ஸ்ரீகாந் தெரிவிப்பு
ஊடகவியலாளர் நிர்மலராஜன் யாரிடம் இருந்து அச்சுறுத்தல்களை எதிர்கொண்டார், என்ன காரணத்திற்காக குறித்த அச்சுறுத்தல் ஏற்பட்டது போன்ற விடங்கள், அவர் கொலை செய்யப்படுவதற்கு முன்னரே வெளிப்படுத்தப்பட்டு இருந்தது என தெரிவித்த ஈ.பி.டி.பியின் ஊடக செயலாளர் பன்னீர் செல்வம் ஸ்ரீகாந் பொன் சிவபானில் கொலை செய்வதற்கான கிளைமோர் பொருத்தப்பட்டது. அதற்கு யார் யாரெல்லாம் உடந்தையாக செயற்பட்டார்கள். இது தொடர்பான விசாரணைகளை எவ்வாறு அமுக்கினார்கள் போன்ற ஆதாரங்கள் எம்மிடமும் இருக்கின்றன.
அவை விசாரிக்கப்படுபாயின் குறித்த ஆதாரங்களை சமர்ப்பிதற்கு நாமும் தயாராகவே இருக்கின்றோம் என்றும் தெரிவித்தார்.
இன்று யாழ் ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் மேலும் கூறுகையில் –
ஊடகவியலாளர் நிமல்ராஜன் கொலை தொடர்பாக பார்ப்போமேயானால், அவர் 2000 ஆம் ஆண்டு ஒக்டோபர் 19 ஆம் திகதி கொலை செய்யப்பட்டிருந்தார்.
2000 ஒக்டோபர் 10ஆம் வெளியாகிய சுடரொளி பத்திரிகையில் வெளியாகிய செய்தியில் நிமல்ராஜனுக்கு எந்த தரப்பினால் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது என்பதும் அதற்கான காரணம் என்ன என்பதும் தெளிவாக சொல்லப்பட்டிருக்கின்றது.
அன்றைய காலச்சூழலில் நிமல்ராஜனுடன் நெருக்கமாக பணியாற்றிய மூத்த பத்திரிகையாளரினால் விண்ணன் என்ற புனை பெயரில் எழுதப்பட்ட அந்த வி்ளக்கமான கட்டுரையில் ஈ.பி.டி.பி. கட்சிக்கும் நிமல்ராஜனுக்கும் முரண்பபாடு இருப்பதாகவோ, நிமல்ராஜனுக்கு ஈ.பி.டிபி. இனால் அச்சுறுத்தல் இருக்கின்றது என்றோ ஒரு வசனம்கூட சொல்லப்படவில்லை. இதுதான் உண்மை. இவ்வாறுதான் அனைத்து குற்றச்சாட்டுக்களும் இட்டுக்கட்டப்படவையகவே இருக்கின்றன.
ஆனால் ஒரு விடயம். கடந்த காலங்களில் நிமல்ராஜன் மட்டும் கொலை செய்யப்படவில்லை. இந்த மண்ணிலே பல துறைசார் ஆளுமைகள் கொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். அவையும் விசாரிக்கப்பட வேண்டும். அவ்வாறான கொலைகளுக்கு உடந்தையாக செயற்பட்ட பல ஆசாமிகள் இப்போதும் எம்மத்தியில் வாழ்ந்துகொண்டிருக்கின்ற்ர்கள். இவ்வாறான சில ஆசாமிகள்தான், எமக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தூசுதட்டி எம்மை சிக்க வைக்க ஆர்வமாக செயற்படுவதாகவும் சொல்லப்படுகிறது. அவ்வாறானவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். ஈ.பி.டி.பி ஐ நோக்கி அவர்கள் சுட்டுவிரலை நீட்டும் போது ஏனைய நான்கு விரல்களும் அவர்களை நோக்கியே இருக்கின்றது என்பதை மறந்து விடக்கூடாது .
உதாரணமாக யாழ் மாநகர சபையின் முன்னாள் மேயர் சறோஜினி யோகேஸ்வரன் கொலை செய்யப்பட்டிருக்கிறார். பொன் சிவபாலன் போன்ற பலர் கொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். பொன் சிவபானில் கொலை செய்வதற்கான கிளைமோர் பொருத்தப்பட்டது. அதற்கு யார் யாரெல்லாம் உடந்தையாக செயற்பட்டார்கள். இதொடர்பான விசாரணைகளை எவ்வாறு அமுக்கினார்கள் போன்ற ஆதாரங்கள் எம்மிடமும் இருக்கின்றன. அவைவிசாரிக்கப்படுபாயின் குறித்த ஆதாரங்களை சமர்ப்பிதற்கு நாமும் தயாராகவே இருக்கின்றோம்.
எவ்வாறாயினும், எமக்கு எதிரான விடயங்கள் தொடர்பாக மகிழ்ச்சி அடைகின்றோம். எமக்கு எதிரான தரப்புக்கள் எதிர்பார்ப்பது போன்று, தற்போதைய அயசியல் சூழலில் எமக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் வெளிப்படைத் தன்மையோடு நீதியான முறையில் விசாரிக்கப்பட்டு உண்மைகள் வெளிப்படுகின்ற சூழல் உருவாக்கப்படுமாயின் எமக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுக்களும் இட்டுக்கட்டப்பட்ட பொய்கள் என்பது நிரூபிக்கப்படும் என்பதில் எமக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கின்றது.
எனவே அனைவருக்கும் ஒரு விடயத்தினை தெளிவாக சொல்கின்றோம். எமது செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா சார்பில் பகிரங்கமான சவாலாக சொல்கின்றேன் எமக்கு எதிராக ஆதாரங்கள் இருக்கமாயின் உரிய இடங்களில் அவற்றை முறைப்பாடுகளுகாக பதிவு செய்யுங்கள். அவை தொடர்பான விசாரணைகளை எதிர்கொள்ள நாங்கள் தயாராகவே இருக்கின்றோம். சமூக ஊடகங்கள் ஆதாரங்களை பொருத்தமான இடங்கள் அல்ல என்பதை தெரிந்து கொள்ளுங்கள்” என்று தெரிவித்தார்
2-
மண்டைதீவு கொலைகள் தொடர்பில் உடன் விசாரணை வேண்டும் – அனுரவுக்கு டக்ளஸ் அவசர கடிதம்!
……
மண்டைதீவு கொலைகள் தொடர்பாக வெளியாகியுள்ள கருத்துக்களின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்து மக்களுக்கு உண்மைகளை வெளிப்படுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பொலிஸ் மா அதிபருக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவினால் அவசர கடிதம் எழுதப்பட்டுள்ளதாக ஈ.பி.டி.பி. ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அவை விசாரிக்கப்படுமாயின் நாமும்
முழுமையாக ஒத்துழைப்பு வழங்க தயாராகவே இருக்கின்றோம் என்றும் தெரிவித்தார்.
இன்று யாழ் ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறிகையில் –
“ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 60 ஆவது கூட்டத் தொடர் நடைபெற்று வருகின்ற நிலையில், ஏற்கனவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளரின் அறிக்கையில் கடந்த காலங்களில் இந்த நாட்டிலே இடம்பெற்ற விடயங்கள் தொடர்பாக இலங்கை இராணுவத்தினரும் புலிகளும் விசாரிக்கப்பட வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் மத்தியில் அவை பேசுபொருளாக இருப்பதனை தவிர்க்கும் நோக்கிலும்,
கடந்த காலங்களில் இந்த நாட்டில் இடம்பெற்ற அனைத்து விடயங்களும் விசாரிக்கப்பட்டு நீதி வழங்கப்பட்டும் என்று தற்போதைய அரசாங்கம் தொடர்ச்சியாக சொல்லி வருகின்ற நிலையில், கடந்த காலங்களில் எமக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை மீண்டும் பேசுபொருளாக்கி எம்மை அரசியல் களத்தில் இருந்து முழுமையாக அகற்ற வேண்டும் என்று உள்ளூர விரும்புகின்ற பிரகிருதிகளும், இதன்மூலம் புலி ஆதரவு தரப்பினரை மகிழ்விக்க முடியும் என்று கணக்கு போடுகின்றவர்களும், தங்களுடைய அனைத்து வளங்களையும் பயன்படுத்தி எமக்கு எதிரான செயற்பாடுகளை, பிரசாரங்களை முன்னெடுத்து வருவதை அவதானிக்ககூடியதாக இருக்கின்றது.
அதற்காக, கடந்த காலங்களில் எமது கட்சியின் செயற்பாட்டாளர்களாக இருந்து கட்சி நிலைப்பாடுகளுக்கு மாறாக சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டதன் காரணமாக கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட சிலர் விலைக்கு வாங்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருவதையும் அவதானித்து வருகின்றோம்.
தன்னுடைய வாழ்நாளையே தமிழ் மக்களுடைய அபிலாசைகளுக்காக அர்ப்பணித்து மானசீகமாக மக்களுக்காக உழைத்து வருகின்ற – தன்னை நோக்கி வருகின்ற சவால்களை எல்லாம் எதிர்கொள்ளும் நெஞ்சுரம் மிக்க தலைமைத்துவ ஆளுமையான தோழர் டக்ளஸ் தேவானந்தாவை தலைமையாக கொண்டு செயற்படுகின்ற நாம் இவ்வாறான சமூக ஊடக பரபரப்புக்களை அலட்டக்கொள்ளவில்லை.
எமக்கு எதிரான குற்றசாட்டுக்கள் அனைத்தும் அந்தந்தக் காலப் பகுதில் எமக்கு எதிராக சுமத்தப்பட்ட பொய்கள் என்பதை உறுதியாக சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன் என்றும் அவர் தெரிவித்தார்
3-
இன்று யாழ் ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறிகையில் –
……
ஊடகவியலாளர் நிமல்ராஜன் கொலை தொடர்பாக பார்ப்போமேயானால், அவர் 2000 ஆம் ஆண்டு ஒக்டோபர் 19 ஆம் திகதி கொலை செய்யப்பட்டிருந்தார்.
ஒக்டோபர் 01 ஆம் வெளியாகிய சுடரொளி பத்திரிகையில் வெளியாகிய செய்தியில் நிமல்ராஜனுக்கு எந்த தரப்பினால் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது என்பதும் அதற்கான காரணம் என்ன என்பதும் தெளிவாக சொல்லப்பட்டிருக்கின்றது.
அன்றைய காலச்சூழலில் நிமல்ராஜனுடன் நெருக்கமாக பணியாற்றிய மூத்த பத்திரிகையாளரினால் விண்ணன் என்ற புனை பெயரில் எழுதப்பட்ட அந்த வி்ளக்கமான கட்டுரையில் ஈ.பி.டி.பி. கட்சிக்கும் நிமல்ராஜனுக்கும் முரண்பபாடு இருப்பதாகவோ, நிமல்ராஜனுக்கு ஈ.பி.டிபி. இனால் அச்சுறுத்தல் இருக்கின்றது என்றோ ஒரு வசனம்கூட சொல்லப்படவில்லை.
இதுதான் உண்மை.
இவ்வாறுதான் அனைத்து குற்றச்சாட்டுக்களும் இட்டுக்கட்டப்படவையகவே இருக்கின்றன.
ஆனால் ஒரு விடயம். கடந்த காலங்களில் நிமல்ராஜன் மட்டும் கொலை செய்யப்படவில்லை. இந்த மண்ணிலே பல துறைசார் ஆளுமைகள் கொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள்.
அவையும் விசாரிக்கப்பட வேண்டும். அவ்வாறான கொலைகளுக்கு உடந்தையாக செயற்பட்ட பல ஆசாமிகள் இப்போதும் எம்மத்தியில் வாழ்ந்துகொண்டிருக்கின்ற்ர்கள். இவ்வாறான சில ஆசாமிகள்தான், எமக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தூசுதட்டி எம்மை சிக்க வைக்க ஆர்வமாக செயற்படுவதாகவும் சொல்லப்படுகிறது.
அவ்வாறானவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். ஈ.பி.டி.பி ஐ நோக்கி அவர்கள் சுட்டுவிரலை நீட்டும் போது ஏனைய நான்கு விரல்களும் அவர்களை நோக்கியே இருக்கின்றது என்பதை மறந்து விடக்கூடாது .
உதாரணமாக யாழ் மாநகர சபையின் முன்னாள் மேயர் சறோஜினி யோகேஸ்வரன் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
பொன் சிவபாலன் போன்ற பலர் கொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள்.
பொன் சிவபானில் கொலை செய்வதற்கான கிளைமோர் பொருத்தப்பட்டது. அதற்கு யார் யாரெல்லாம் உடந்தையாக செயற்பட்டார்கள். இது தொடர்பான விசாரணைகளை எவ்வாறு அமுக்கினார்கள் போன்ற ஆதாரங்கள் எம்மிடமும் இருக்கின்றன.
அவை விசாரிக்கப்படுபாயின் குறித்த ஆதாரங்களை சமர்ப்பிதற்கு நாமும் தயாராகவே இருக்கின்றோம்.
எவ்வாறாயினும், எமக்கு எதிரான விடயங்கள் தொடர்பாக மகிழ்ச்சி அடைகின்றோம். எமக்கு எதிரான தரப்புக்கள் எதிர்பார்ப்பது போன்று, தற்போதைய அயசியல் சூழலில் எமக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் வெளிப்படைத் தன்மையோடு நீதியான முறையில் விசாரிக்கப்பட்டு உண்மைகள் வெளிப்படுகின்ற சூழல் உருவாக்கப்படுமாயின் எமக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுக்களும் இட்டுக்கட்டப்பட்ட பொய்கள் என்பது நிரூபிக்கப்படும் என்பதில் எமக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கின்றது.
எனவே அனைவருக்கும் ஒரு விடயத்தினை தெளிவாக சொல்கின்றோம். எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சார்பில் பகிரங்கமான சவாலாக சொல்கின்றேன் எமக்கு எதிராக ஆதாரங்கள் இருக்கமாயின் உரிய இடங்களில் அவற்றை முறைப்பாடுகளுகாக பதிவு செய்யுங்கள்.
அவை தொடர்பான விசாரணைகளை எதிர்கொள்ள நாங்கள் தயாராகவே இருக்கின்றோம். சமூக ஊடகங்கள் ஆதாரங்களை பொருத்தமான இடங்கள் அல்ல என்பதை தெரிந்து கொள்ளுங்கள்” என்று தெரிவித்தார்

