பருத்தித்துறை நகரசபை தவிசாளரின் தலைமையில் கவனயீர்ப்பு போராட்டம்..!
பருத்தித்துறையில் அமைந்துள்ள சில இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி பருத்தித்துறை நகர சபை தவிசாளர் தலைமையில் வர்த்தகர்கள் பொதுமக்களை ஒன்றிணைத்து வரும் 25 ஆம் திகதி கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை நகர சபை மண்டபத்தில் இன்று (22) வெள்ளிக்கிழமை நகர சபை தவிசாளர் டக்ளஸ் போல் தலைமையில் இடம்பெற்று ஊடக சந்திப்பில் இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை நகரை பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் வரும் 25 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 8 மணிக்கு பருத்தித்துறை துறைமுகப்பகுதியில் இருந்து ஆரம்பித்து பருத்தித்துறை பிரதேச செயலகம் வரை சென்று மகஜர் வழங்கப்பட உள்ளது.
பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம், தபால் நிலையம், வெளிச்சவீடு ஆகிய இடங்களை ஆக்கிரமித்துள்ள இராணுவ முகாம்களை விடுவிக்க வலியுறுத்தி
Cut – 01) வின்சன்டி போல் டக்ளஸ் போல் நகர பிதா பருத்தித்துறை நகர சபை
02) தம்பிராசா சந்திரதாஸ் தலைவர் வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம்.

