நாட்டின் பணவீக்கம் மேலும் அதிகரிப்பு!

இலங்கையின் பணவீக்கம் மேலும் அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கையின் வரலாற்றில் அதிகபட்ச பணவீக்க விகிதம் 2022 செப்டம்பர் மாதம் பதிவாகியுள்ளது.

தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டில் வருடாந்த புள்ளி மாற்றத்தால் அளவிடப்படும் முதன்மைப் பணவீக்கம் செப்டம்பர் மாதத்தில் 69.8% ஆக பதிவாகியுள்ளது.

ஓகஸ்ட் மாதத்தில் பணவீக்கம் 64.3 வீதமாக பதிவாகியிருந்தது. இது ஆகஸ்ட் மாதத்தைக் காட்டிலும் செப்டம்பர் மாதத்தில் பணவீக்கம் 5.5வீத அதிகரிப்பை பதிவுசெய்துள்ளது.

இதேவேளை உணவுப் பணவீக்கம் ஓகஸ்ட் மாதத்தில் 93.7 வீதமாக இருந்த நிலையில் செப்டம்பரில் அது 94.9 வீதமாக உயர்ந்துள்ளது.

உணவில்லாப் பொருட்களின் பணவீக்கம், 50.2 வீதத்தில் இருந்து 57.6 வீதமாக உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor