தமிழ் தேசிய பேரவை மற்றும் தமிழ்தேசிய மக்கள் முன்ணனியின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடல்..!
சமகால அரசியல் நிலவரம் தொடர்பான தமிழ் தேசிய பேரவை மற்றும் தமிழ்தேசிய மக்கள் முன்ணனியின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடல் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் தமிழ் தேசிய மக்கள் முன்ணனியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னப்பலம் தலைமையில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் , வேலணை பிரதேச சபை உறுப்பனர் நாவலன் சட்டத்தரணி க.சுகாஸ் மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.


