திடீர் மண்சரிவு: குழந்தை உட்பட இருவர் வைத்தியசாலையில் அனுமதி

நிலவும் சீரற்ற வானிலையால் ஹாலிஎல, உடுவர பகுதியில் நேற்று மாலை மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் வீடொன்றின் ஒரு பகுதி முற்றாக சேதமடைந்துள்ளது.

இதன் போது வீட்டின் இடிபாடுகளில் சிக்கிய ஒரு குழந்தையும், ஒரு பெண்ணும் மீட்கப்பட்டு பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது வீட்டிலிருந்த உபகரணங்கள் அனைத்தும் முற்றாக சேதமடைந்துள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: admin