“நாவலர் பெருமான் சைவத்தமிழ் உலகின் அடையாளம்” சொற்பொழிவு

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமான் ஆண்டிலே (2022) இளம் இந்துச் சிறார்களிடையே நாவலர் பெருமான் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும்முகமாக, யாழ்.மாவட்ட இந்து சமய அறநெறிப் பாடசாலைகளில் ‘வாராந்தச் சொற்பொழிவும் – மாதந்தோறும் நாயன்மார் குருபூஜை நிகழ்வும்’ . சிவஸ்ரீ் . பால. திருகுணானந்தக்குருக்கள் (ரொறன்ரோ, கனடா) அவர்களின் அனுசரணையுடன் சமயஜோதி திரு.கதிர்காமன் நிஜலிங்கம் அவர்களின் ஒழுங்கமைப்பில்
நிகழ்ச்சித் தொடர் வரிசையிலே, 40 ஆவது  சொற்பொழிவு நிகழ்வு சுழிபுரம் கிழக்கு பத்திரகாளி அம்பாள் அறநெறிப் பாடசாலை மண்டபத்தில் 30.09.2022 வெள்ளிக்கிழமை மாலை 03.30 மணிக்கு இந்து சமய கலாசார உத்தியோகத்தர் திருமதி அஜிதா கோபிநாத் அவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ளது.

நாவலர் குருபூஜை, மற்றும் தலைமையுரை நிகழ்வுகளைத் தொடர்ந்து, “நாவலர் பெருமான் சைவத்தமிழ் உலகின் அடையாளம்” எனுந் தொனிப்பொருளில் சைவப்புலவர் பொன்.சந்திரவேல் அவர்களின் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்வும் அதனைத் தொடர்ந்து சொற்பொழிவிலிருந்து வினாக்கள் தொடுக்கப்பட்டு மாணவர்களுக்கான பாராட்டுப் பரிசில்கள் வழங்கப்படவுள்ளது.

Recommended For You

About the Author: webeditor