
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ சட்டத்துறையில் பட்டம் பெற்றது தொடர்பாக CID விசாரணை
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ எவ்வாறு சட்ட இளமாணி பட்டத்தை பெற்றார் என்பது குறித்து விசாரிக்க குற்றப் புலனாய்வுத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ சட்ட இளமாணி பட்டத்தை எவ்வாறு பெற்றார் என்பது குறித்து விசாரிக்க குற்றப் புலனாய்வுத் துறைக்கு (CID) உத்தரவிடப்பட்டுள்ளதாக, பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ சட்டப் பட்டப் படிப்பை மேற்கொண்டதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் பல புகார்களைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.