எதிர்காலத்தில் இலங்கையில் போராட்டம் வெடிக்கும் அபாயம்!

அரசாங்க ஊழியர்களுக்காக வழங்கப்பட்டு வருகின்ற தற்போதைய சம்பளம் ஆசிரியர்களுக்கு போதுமானதாக இல்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதனால் எதிர்காலத்தில் மீண்டும் மாபெரும் போராட்டம் வெடிக்கும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ள நாட்டில் பொறுப்புள்ள அரசியல்வாதிகள் தற்போது மக்களின் வரிப்பணத்தை அனுபவிப்பதுடன் மக்களின் உரிமையை பறித்து சுரண்டி வருகின்றனர்.

இதனை எதிர்த்து மக்கள் போராட்டங்களை நடத்தினால் அதனை அடக்கியாளும் ஆட்சியாளர்கள் ஒரு போதும் வெற்றி பெற மாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor