ஊழல், மோசடிக் குற்றச்சாட்டு: கடந்த வாரம் நியமிக்கப்பட்ட அமைச்சு செயலாளர் நாளை ஓய்வு பெறுகிறார்

டிசம்பர் மாதம் ஓய்வு பெறவிருந்த அமைச்சின் செயலாளர் நாளைய (30) தினம் ஓய்வு பெற தீர்மானித்துள்ளார்.
இது தொடர்பான ஆவணங்கள் ஓய்வூதியத் திணைக்களத்துக்கும் அனுப்பப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் ஓய்வு பெறவுள்ள நிலையில், புதிய அரசாங்கத்தினால் அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டு கடந்த வாரம் பொறுப்பேற்றார்.

இந்த வருடம் டிசெம்பர் மாதம் 3ஆம் திகதி ஓய்வு பெறவிருந்த போதிலும், தனிப்பட்ட விடயம் காரணமாக நாளை (30) முதல் ஓய்வு பெறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், சம்பந்தப்பட்ட செயலாளர் மீது குற்றச்சாட்டுகள் இருப்பதாக சிலர் புகார் தெரிவித்ததால் அவர் ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

Recommended For You

About the Author: admin