முன்னால் மாநகரசபை முதல்வர் வீட்டில் திருட்டு

நுவரெலியா கஜபாபுர பகுதியில் அமைந்துள்ள நுவரெலியா முன்னால் மாநகரசபை முதல்வரின் வீடொன்றினுள் புகுந்த திருடர்கள் வீட்டில் இருந்த நகைகள் உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று சனிக்கிழமை (28) அதிகாலை 2 மணியளவில் வீட்டில் இருந்தவர்கள் உறங்கிக் கொண்டிருந்த போது வீட்டினுள் இனம் தெரியாதோர் புகுந்துள்ளனர்.

பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் போது வீட்டின் மேல்மாடியில் ஜன்னல் ஒன்றினை உடைத்து உள்நுழைந்த மர்ம நபர்கள் தனி அறையொன்றில் அலுமாரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த சிறிய பெட்டகத்திலிருந்து தங்கப் பொருட்கள் மற்றும் சில பெறுமதியான பொருட்களும் காணாமல் போனது தெரியவந்தது.

எனினும் அலுமாரிகள் உடைக்கும் சத்தம் கேட்டு வீட்டின் உரிமையாளர்கள் மேல்மாடியில் வந்து பார்த்த போது ஜன்னல் திறக்கப்பட்டிருந்ததுடன் அங்கிருந்து திருடர்கள் இருவர் தப்பி ஓடுவதையும் அவதானித்தவர்கள் அயலவர்களின் உதவியை நாடியுள்ளனர்.

இருந்தும் இவர்கள் முச்சக்கர வண்டியில் ஒன்றில் தப்பி செல்லும் காட்சிகள் வீட்டுக்கு அருகில் வீதியோரமாக பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காணொளியில் பதிவாகியுள்ளது இதனை அடிப்படையாக கொண்டு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த கொள்ளை சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் வீட்டார் முறைப்பாடு செய்துள்ள நிலையில் தடயவியல் பொலிஸாரின் உதவியுடன் கைரேகை நிபுணர்கள், மோப்ப நாயுடன் பரிசோதனைகளை மேற்கொண்டு நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: admin