தாயை ஏமாற்றி விட்டு காதலனுடன் சென்ற பாடசாலை மாணவி!

13 வயதான பாடசாலை மாணவியை வல்லுறவுக்குட்படுத்தியதாகக் கூறப்படும் 17 வயதான பாடசாலை மாணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் மஹவிலச்சிய பகுதியில் ,இடம்பெற்றதாக தெரியவருகின்றது.

பொலிஸார் பாடசாலை செல்வதாக தனது தாயிடம் கூறிவிட்டு 13ஆம் திகதி காலை வீட்டை விட்டு மாணவி வெளியேறி காதலுடன் சென்றுள்ளார்.

அதிபர் தகவல்
பாடசாலை அதிபர் தாயாரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, மகள் பாடசாலைக்கு வரவில்லையென தாயிடம் தெரிவித்ததை அடுத்து இச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மாணவி பாடசாலைக்கு அருகில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த காதலனுடன் கைவிடப்பட்டிருந்த வீடொன்றுக்குச் சென்று பாடசாலை சீருடை மாற்றிக் கொண்டுள்ளார்.

பின்னர் அங்கு வைத்தே காதலனுடன் கணவன் மனைவி போல் நடந்து கொண்டதாக மாணவி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

அதன்பின்னர் பாடசாலை முடியும் நேரத்தில் பாடசாலை சீருடையுடன் பாடசாலைக்கு அருகில் வந்தபோது உறவினரிடம் சிக்கியுள்ளார்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட மாணவனை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய மஹவிலச்சிய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor