யாழ் பருத்தித்துறையில் சடவிரோத மண்ணெண்ணெய் விற்ப்பனையில் ஈடுபட்ட நபர் கைது!

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை இரண்டாம் குறுக்கு தெரு பகுதியில் 380 லிட்டர் மண்ணெண்ணெயினை விற்பனை செய்தவரும், அதனை வாங்கிய நபரும் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று(14.09.2022)இடம்பெற்றுள்ளது.

பருத்தித்துறை பொலிஸ் நிலைய விசேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் பருத்தித்துறை இரண்டாம் குறுக்கு தெருவில் உள்ள ஒரு பகுதி விசேட புலனாய்வு பிரிவினரினால் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

பொலிஸார் நடவடிக்கை

இதன்போது 380 லிட்டர் மண்ணெண்ணெய் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்ட இருவரையும் உரிய சட்டநடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor