இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கேரள கஞ்சாவைக் கடத்தியவர்கள் கைது!

இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக படகு மூலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட சுமார் 130 மில்லியன் ரூபா பெறுமதியான 434 கிலோ கேரளா கஞ்சாவுடன் 05 இந்தியர்களும் 05 இலங்கையர்களும் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் 10 பேரும் கற்பிட்டிக்கடலில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையின் தீவிர நடவடிக்கை

தமிழகத்தின் தூத்துக்குடியில் இருந்து கடத்தி வரப்பட்ட கேரள கஞ்சாவைக் கற்பிட்டியில் இறக்கிவிட்டுத் தப்பிச் செல்லும் நோக்கில் உட்புகுந்த தூத்துக்குடியைச் சேர்ந்த ஐவர் இலங்கைப் படகில் கேரள கஞ்சாவை மாற்ற முற்பட்டபோது இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது இந்தக் கேரள கஞ்சாவைக் கரைக்குக் கொண்டு வர முயன்ற இலங்கை மீனவர்கள் ஐவரும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சந்தேக நபர்கள் சான்றுப் பொருட்களுடன் கற்பிட்டிப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor