அரசமைப்புடன் விளையாட எவருக்கும் அனுமதி இல்லை

“ஜனாதிபதித் தேர்தலை பிற்போட எவருக்கும் இடமளிக்கமாட்டோம். அரசமைப்புடன் விளையாட எவருக்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது.” – என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“ஜனாதிபதித் தேர்தலில் நான் நிச்சயம் போட்டியிடுவேன் என்பதுடன் அதில் வெற்றி பெறுவதும் உறுதி. அவ்வாறு வெற்றி பெற்ற பின்னர் எனக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்குகள் எல்லாம் அரசமைப்பின் பிரகாரம் வலுவற்றதாகிவிடும். இதனால் கட்சித் தலைமைத்துவம் தொடர்பிலும் பிரச்சினை எழாது.

ஜனாதிபதித் தேர்தலை பிற்போட எவருக்கும் இடமளிக்கமாட்டோம். அரசமைப்புடன் விளையாட எவருக்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது.

எனவே, உரிய நேரத்தில் ஜனாதிபதித் தேர்தல் நிச்சயம் நடத்தப்படும். அது தொடர்பில் அச்சம் கொள்ள வேண்டியதில்லை.” – என்றார்.

Recommended For You

About the Author: admin