வெளிநாட்டு வேலைவாய்ப்பினை எதிர்பார்க்கும் இலங்கையர்களுக்கு கிடைத்துள்ள அரிய வாய்ப்பு!

கட்டார் ஏயார்வைஸ் (Qatar Airways Group) தனது உலகளாவிய செயற்பாடுகளுக்காக, வாடிக்கையாளர் சேவையை எதிர்வரும் மாதங்களில் மேம்படுத்தவுள்ளது.

இதன்கீழ் இலங்கையில் இருந்து கணிசமான எண்ணிக்கையிலான புதிய ஊழியர்களை உள்வாங்க, அந்த நிறுவனம் எதிர்பார்த்துள்ளது.

நாளை முதல் ஏற்றுக் கொள்ளப்படும் விண்ணப்பம்
2022 செப்டெம்பர் 15ஆம் திகதி தொடக்கம், இலங்கை பிரஜைகளிடமிருந்து பல்வேறு பிரிவுகளுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளத் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஆட்சேர்ப்பு இயக்கமானது குழுமத்தின் உலகளாவிய ஆட்சேர்ப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாகும்.

கட்டார் ஏர்வேஸ், கட்டார் டியூட்டி ஃப்ரீ, கட்டார் ஏவியேஷன் சர்வீசஸ், கட்டார் ஏர்வேஸ் கேட்டரிங் கம்பெனி, கட்டார் விநியோக நிறுவனம் மற்றும் ஹோட்டல்கள் வரை அதன் பல்வேறு பிரிவுகளுக்கு பணியாளர்களை பணியமர்த்த குழு இலக்கு வைத்துள்ளது.

இணையம் ஊடாக விண்ணப்பிக்கலாம்

நாட்டில் கட்டார் ஏர்வேஸின் ஆட்சேர்ப்பு இயக்கம் 2022 செப்டெம்பர் 15 மற்றும் 16ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெறும்.

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கட்டார் ஏர்வேஸ் இணையம் ஊடாக பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor