புதிய கடவுச் சீட்டு பெறவுள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் போது தெளிவான தேசிய அடையாள அட்டைகளை சமர்ப்பிக்குமாறு பொதுமக்களிடம் குடிவரவு திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

பழைய தேசிய அடையாள அட்டைகளை கொண்டுள்ள விண்ணப்பதாரர்கள் புதிய தேசிய அடையாள அட்டையுடன் தமது பணிகளை மேற்கொள்ள வரும் போது கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வது இலகுவாக இருக்கும் என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள அடையாள அட்டை பத்து வருடங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்டிருந்தால் அப்போதைய புகைப்படத்திற்கும் இப்போதைய புகைப்படத்திற்கும் மாற்றங்கள் நிறையவே உண்டு எனத் தெரிவித்துள்ளார்.

அதில் பல சிக்கல்கள் ஏற்படும் என்பதனால்தான் தாம் தெளிவான அடையாள அட்டைகளை கோருவதாகவும் தெரிவித்துள்ளார்.

கடவுச்சீட்டினை பெறவுள்ள நபர் தன்னை உறுதிப்படுத்திக்கொள்ள தற்போது தேசிய அடையாள அட்டை பாவிக்கப்படுவதாகவும், ஆனால் 2025 ஆம் ஆண்டுக்கு பின்னர் கைவிரல் ரேகைகள் தான் முதலிடம் பெறும் எனவும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin