யாழில் பெண்கள் பயன்படுத்தும் கைப்பையுடன் நடமாடிய நபர் கைது!

யாழில் பெண்கள் பயன்படுத்தும் கைப்பையுடன் நடமாடியவரிடம் இருந்து சுமார் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளும், ஹெரோயின் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய இளைஞர்
மாவட்ட செயலகத்திற்கு அருகில் நேற்றைய தினம் மாலை பெண்கள் பயன்படுத்தும் கைப்பையுடன் இளைஞரொருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் அறிந்த யாழ்ப்பாண பொலிஸ் புலனாய்வு பிரிவினர் சம்பவ இடத்திற்கு சென்று குறித்த இளைஞரிடம் விசாரணைகளை முன்னெடுத்து, அவரது உடமைகளையும் சோதனையிட்டுள்ளனர்.

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் அவர் 24 வயதுடைய குருநகர் பகுதியை சேர்ந்தவர் என தெரியவருகிறது.

கைப்பையில் போதைப்பொருள், தங்க நகை
சந்தேகநபர் வைத்திருந்த பெண்களின் கைப்பையினுள் சுமார் 8 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் சுமார் 20 இலட்ச ரூபாய் பெறுமதியான தங்க நகை என்பன காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இளைஞரை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Recommended For You

About the Author: webeditor