அரசியல் கேள்விகள் வேண்டாம் ரஜினிகாந்த்: மீண்டும் இமயமலைக்கு பயணம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அபுதாபிக்கு ஓய்விற்கு சென்றிருந்த நிலையில் நேற்று(28) நாடு திரும்பியிருந்தார்.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்திலிருந்து வெளியில் வரும்போது, பல ஆயிரம் ரசிகர்கள் அவ்விடத்தில் கூடியதுடன் அவருடன் செல்ஃப்பியும் எடுத்துக்கொண்டனர்.

இதனிடையே அபுதாபியில் இருந்து சென்னைக்கு திரும்பிய ரஜினிகாந்த், இன்று தனது நண்பர்களுடன் இமயமலை செல்வதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இது தொடர்பாக போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

அதில், “ஒவ்வொரு வருடமும் இமயமலைக்கு செல்கிறேன், இந்த வருடமும் அங்கு செல்வது மகிழ்ச்சி. பத்ரிநாத், கேதார்நாத் செல்ல உள்ளேன்.

இமயமலையில் ஒருவாரம் தங்கியிருப்பேன்“ என்றார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்கள் அரசியல் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ரஜினிகாந்த், அரசியல் கேள்வி வேண்டாம் என தெரிவித்துவிட்டு புறப்பட்டு சென்றார்.

இமயமலைக்கு செல்லும் நடிகர் ரஜினிகாந்த், பத்ரிநாத், கேதார்நாத், பாபாஜி குகை உள்ளிட்ட புனித தலங்களுக்குச் சென்று வழிபட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், அடுத்த மாதம் 3 அல்லது 4ஆம் திகதியளவில் அவர் சென்னை திரும்ப இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

Recommended For You

About the Author: admin