பொதுஜன பெரமுன அலுவலகத்திற்கு முன்பாக கடும் பதற்றம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்திற்கு முன்பாக கடும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் அமைந்துள்ள குறித்த அலுவலகத்திற்கு முன்பாக பல சிவில் அமைப்புகளின் செயற்பாட்டாளர்கள் வந்து, கட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்ததை அடுத்தே பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.

அதேவேளை, பொதுஜன பெரமுன அலுவலகத்திலிருந்து பயணித்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினர் தடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin