‘மாயி’ திரைப்பட இயக்குநர் சூர்ய பிரகாஷ் காலமானார்

தமிழில் சரத்குமார் நடிப்பில் வெளியான மாயி திரைப்படத்தின் இயக்குநர் சூர்ய பிரகாஷ் இன்று அதிகாலை மாரடைப்பின் காரணமாக உயிரிழந்துள்ளார்.

இவர் தமிழில் ராஜ்கிரண் நடிப்பில் வெளியான மாணிக்கம் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, மாயி திரைப்படத்தைத் தொடர்ந்து திவான் என்கின்ற படத்திலும் சரத்குமாருடன் பணியாற்றியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து நடிகர் ஜீவன் நடித்த அதிபர் என்கின்ற படத்தை இயக்கினார்.

மேலும் இவர் இயக்கிய வரசநாடு என்கின்ற திரைப்படம் இன்னும் வெளிவராமல் உள்ளது.

இந்நிலையில் இவரது திடீர் இறப்பு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நடிகர் சரத்குமார் இயக்குநர் சூர்ய பிரகாஷின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: admin