ஆசிய கிண்ணத்தை கைப்பற்றிய இலங்கை அணிக்கு வாழ்த்து கூறிய ஜனாதிபதி!

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் இலங்கை அணி சாம்பியன் பட்டம் வென்றமைக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணிக்கு எதிராக இன்று டுபாயில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணி 23 ஓட்டங்களினால் வெற்றியீட்டியது.

இறுதிப் போட்டியில் அபார வெற்றியை ஈட்டி இலங்கை அணி நாட்டின் நற்பெயரை மீண்டும் சர்வதேசத்தில் உயர்த்தியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

புகழாரம்

தலைமைத்துவம் மற்றும் அணியின் ஏனைய வீரர்களின் எல்லையில்லா அர்ப்பணிப்பு என்பனவே இந்த அனைத்து வெற்றிகளுக்கும் ஏதுவாக அமைந்துள்ளது என அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்த வெற்றிக்காக உழைத்த பயிற்றுவிப்பாளர்கள், முகாமைத்துவம் மற்றும் நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி பாராட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.

நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடி நிலை

நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடி நிலையிலும், அனைவரும் வெற்றியை நோக்கி செய்த பொதுவான அர்ப்பணிப்பு கிரிக்கெட் உலகிற்கு மட்டுமன்றி ஏனைய துறைகளுக்கும் முன்மாதிரியாக அமைந்துள்ளது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்த அபார வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் இருதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor