பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும் பிரித்தானிய மகாராணியின் பூதவுடல்!

பிரித்தானிய மகாராணி எலிசபெத்தின் ( Elizabeth II) பூதவுடல் 5 நாட்கள் பொதுமக்கள் அஞ்சலிக்காக லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் அரங்கில் வைக்கப்படவுள்ளது.

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று உயிரிழந்தார்.

இரண்டாம் எலிசபெத் மகாராணி உயிரிழந்ததையடுத்து பிரித்தானியாவின் புதிய மன்னராக இளவரசர் 3 ஆம் சார்லஸ் அரியணை ஏறியுள்ளார்.

பிரித்தானிய மகாராணி எலிசபெத் மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ராணி எலிசபெத்தின் பூதவுடல் நல்லடக்கம் 10 நாட்களுக்கு பின் நடைபெறும் எனவும், 5 நாட்கள் பொதுமக்கள் அஞ்சலிக்காக லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் அரங்கில் ராணியின் பூதவுடல் வைக்கப்படவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Recommended For You

About the Author: webeditor