தாயை துன்புறுத்திய தந்தையை கொன்ற மகன்!

மாத்தளையில் தாயை துன்புறுத்திய தந்தையை கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஊருபொக்க பிரதேசத்தில் நேற்று குடிபோதையில் தனது தாயை துன்புறுத்திய தந்தையே கத்திக் குத்துக்கு இலக்காக உயிரிழந்துள்ளார்.

மகன் கைது

உயிரிழந்தவர் பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடையவர் என ஊருபொக்க பொலிஸார் தெரிவித்தனர்.

கொலை சம்பவம் அவர்களின் வீட்டில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலை சம்பவத்துடன் தொடர்புடைய 17 வயதுடைய மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Recommended For You

About the Author: webeditor