தந்தையின் வாகன சில்லினுள் சிக்கி உயிரிழந்த குழந்தை!

திருகோணமலை – தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாயன்மார் திடல் பகுதியில் தந்தை செலுத்திய வானுடன் மோதி இரண்டு வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

திருகோணமலை – தம்பலகாமம் பகுதியை சேர்ந்த ரஜீந்தன் நட்சத்திரா (02 வயது) என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.

பொலிஸார் தீவிர விசாரணை
தந்தை வானை பின்னால் எடுத்த போது சிறுமி தவறி விழுந்து வானுக்குள் சிக்குண்டதாக ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்த சிறுமியின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: webeditor