ஏடன் வளைகுடாவில் பிரித்தானிய கப்பல் தாக்குதல்

ஏடன் வளைகுடா பகுதியில் பிரித்தானியக் கப்பல் மீது நடத்தப்பட்ட தொடர் ஏவுகணைத் தாக்குதலுக்கு ஏமனின் ஹூதி குழு பொறுப்பேற்றுள்ளது.

‘ஏடன் வளைகுடாவில் பயணம் செய்து கொண்டிருந்த போது தாக்குதலுக்கு உள்ளான பிரித்தானியக் கப்பலான லிகாவிடோஸ் மீது நாங்கள் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டோம்.

ஹூதி இராணுவ செய்தித் தொடர்பாளர் யாஹ்யா ஜாரியா அல்-மசிரா செயற்கைக்கோள் தொலைக்காட்சி சேனல் ஒளிபரப்பிய அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஹூதிகள் பல ஏவுகணைகளை ஏவினார்கள், அது கப்பலை ‘நேரடியாகவும் துல்லியமாகவும்’ தாக்கியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பார்படாஸ் கொடியுடன் கூடிய லிகாவிடோஸ் கப்பல் ஏடனுக்கு கிழக்கே இந்தியப் பெருங்கடலில் ஏவுகணையால் தாக்கப்பட்டதாக யேமன் அரசின் கடலோர காவல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

டீசல் ஜெனரேட்டர் குழாயில் ஏவுகணை மோதியதால், டீசல் கசிவு ஏற்பட்டதால் கப்பல் சிறிய அளவில் சேதம் அடைந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்தில் அனைத்து பணியாளர்களும் காயமின்றி இருந்தனர்.

ஏடனுக்கு கிழக்கே 85 கடல் மைல் தொலைவில் வெடிப்புச் சம்பவம் நடந்ததாக தகவல் கிடைத்ததாக பிரித்தானிய கடல்சார் செயல்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

கப்பல் அடுத்த துறைமுகத்திற்குச் சென்றுவிட்டதாகவும், ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் கப்பலின் கேப்டன் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin