இலங்கையில் போசாக்கு இன்மையால் இருபதாயிரத்திற்கும் மேற்ப்பட்ட சிறுவர்கள் பாதிப்பு!

இருபத்தி ஏழாயிரம் சிறுவர்கள் போசாக்கின்மையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன

இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் நாட்டில் நிலவும் போசாக்கின்மை நிலை குறித்த சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மாணவர் ஒருவரின் மதிய உணவுக்காக 60 ரூபாய் மாத்திரமே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த தொகை போதாது எனவும் திருமதி குமாரி விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

கடுமையான போசாக்கு குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ள கர்ப்பிணித் தாய்மார்களின் போசாக்கு நிலை தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Recommended For You

About the Author: webeditor