முல்லைத்தீவு பகுதியில் செயலிழந்த நிலையில் வெடி பொருட்கள் மீட்பு!

முல்லைத்தீவு வசந்தநகர் பகுதியில் செயலிழந்த நிலையில் வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக, கிளிநொச்சி முல்லைத்தீவு இராணுவ கட்டளை அதிகாரி மற்றும் 57வது படைப்பிரிவு கட்டளை அதிகாரி ஊடாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இரகசிய தகவல்

குறித்த தகவிலிற்கு அமைவாக முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றின் பதில் நீதவான் முன்னிலையில் அகழ்வு பணிகள் நேற்று(05) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி வசந்த நகர் பகுதியில் இந்த அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வெடிபொருட்கள் மீட்பு

இதன்போது, செயலிழந்த நிலையில் வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலஸார் விசாரணைகளை முன்னெடுத்து மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor